சினிமா / TV

பழம்பெரும் பாடகர் கேஜே யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதி.. திரையுலகம் ஷாக்!

தனித்துவமான குரலால் இந்திய சினிமா ரசிகர்களை கட்டிப்போட்டவர் கேஜே யேசுதாஸ். மலையாளம்,தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார்.

இதையும் படியுங்க: தென்னிந்தியாவிலே முதல் படம்…நெட்ப்ளிக்ஸை திணறடித்த லக்கி பாஸ்கர்.!

கொஞ்சும் குமரி படத்தில் ஆசை வந்த பின்னே பாடல் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், எம்எஸ் விஸ்வநாதன், இளையராஜா, சங்கர் கணேஷ், டிராஜேந்தர், தேவா, வித்யாசாகர், ஏஆர் ரகுமான், அனிருத் வரை அனைத்து இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார்.

தமிழில் மட்டும் 700 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள கேஜே யேசுதாஸ்க்கு தற்போது வயது 85. எம்ஜிஆர் முதல் விஜய் வரை பல தலைமுறை நடிகர்களுக்காக பாடியுள்ளார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு ரத்த அணுக்கள் தொடர்பான பிரச்சனை குறித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கேஜே யேசுதாஸ் மகன் விஜய் யேசுதாசும் தனது தந்தையை போல குரலில் சாயல் கொண்டவர். இவரும் தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் பாடலை பாடி வருகிறார்.

யேசுதாஸ் உடல்நிலை மோசமாக உள்ளதாக வெளியான தகவலையடுத்து உலகம் முழுக்க உள்ள அவரது ரசிகர்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.