சினிமா / TV

நம்மள ஏமாத்திட்டாங்க சித்தப்பா- லியோவின் உண்மையான வசூல் இவ்வளவு கம்மியா? வெளிவந்த குட்டு

விஜய்யின் பிளாக்பஸ்டர் திரைப்படம்

நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம்தான் “லியோ”. இத்திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் அர்ஜுன், சஞ்சய் தத், மடோன்னா செபஸ்டியன், மிஷ்கின் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரூ.600 கோடி வசூல் செய்ததாக இத்திரைப்படத்தை தயாரித்த லலித் குமார் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது இதன் உண்மைத்தன்மை குறித்து வெளிவந்துள்ளது. 

வருமான வரி தாக்கலால் வெளியான குட்டு

இந்த நிலையில் தயாரிப்பாளர் லலித்குமார் வரிமான வரி தாக்கல் செய்துள்ளார். இதில் அவர் “லியோ” திரைப்படத்தின் மொத்த திரையரங்கு வசூலே ரூ.160 கோடியே 50 லட்சம்தான் என குறிப்பிட்டுள்ளார். அது போக “லியோ” திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமம் ரூ.124 கோடிக்கும் ஆடியோ உரிமம் ரூ.24 கோடிக்கும் ஹிந்தி உரிமம் ரூ.24 கோடிக்கும் தென்னிந்திய சேட்டலைட் உரிமம் ரூ.72 கோடி ரூபாய்க்கும் விற்பனையாகியுள்ளது. மொத்தத்தில் “லியோ” திரைப்படம் ரூ.404.56 கோடியே வசூலாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

லலித்குமார் செய்த வருமான வரித்தாக்கலின் விவரம் இணையத்தில் கசிந்துள்ளதால் விஜய் ரசிகர்கள் பலரும் கடும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். இப்படி ஏமாற்றப்பட்டுவிட்டோமே என புலம்பி வருகின்றனர். “கூலி” திரைப்படம் “லியோ” படத்தின் வசூலை முறியடிக்க வாய்ப்பில்லை என விஜய் ரசிகர்கள் கூறி வந்த நிலையில் தற்போது “லியோ” படம் மொத்தமாகவே ரூ.400 கோடி வசூல் செய்திருக்கும் தகவல் வெளிவந்து அவர்களை தூங்க விடாமல் செய்துள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.