சினிமா / TV

ராஷ்மிகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்? மத்திய அரசுக்கு சமூக அமைப்பு பரபரப்பு கடிதம்!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பெங்களூரு: தென்னிந்திய முன்னணி நடிகைகளுள் ஒருவரான ராஷ்மிகா மந்தனா, தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களில் நடித்து வருகிறார். கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தனா, பெங்களூரு சர்வதேச திரைப்பட விழாவுக்கு கடந்த ஆண்டு வர மறுத்து விட்டதாக காங்கிரஸ் எம்எல்ஏ ரவி கனிகா குற்றம் சாட்டினார்.

அது மட்டுமல்லாமல், சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொள்ள அழைத்தபோது, தனது வீடு ஹைதராபாத்தில் உள்ளதாகவும், கர்நாடகா எங்கிருக்கிறது எனத் தெரியாது என்றும் ராஷ்மிகா கூறியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், கன்னட திரைப்படத் துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினாலும், கர்நாடகாவையும் கன்னட மொழியையும் புறக்கணித்த ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டாமா? என அவர் கேள்வி எழுப்பினார்.

இவ்வாறு காங்கிரஸ் எம்எல்ஏவின் குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதை ராஷ்மிகா மந்தனா மறுத்துள்ளார். இதன்படி, அவரை யாரும் அழைக்கவில்லை என்றும், இந்த கருத்து பொய்யானது என்றும் ராஷ்மிகா மந்தனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆகியோருக்கு கொடவா சமூக அமைப்பு சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அந்த மாதிரி ஐடியா இல்லங்க.. ஐசிசி சாம்பியன் டிராபியில் இந்தியா படைத்த மொத்த சாதனைகள்!

இந்தக் கடிதத்தில், காங்கிரஸ் எம்எல்ஏவின் மிரட்டலைக் கண்டித்ததோடு, ராஷ்மிகா மந்தனாவின் தனித்துவமான பங்களிப்பு இந்தியாவுக்கு பெருமை சேர்த்து உள்ளதாகவும், அவர் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு விழாவில் கலந்து கொள்வது அவருடைய சொந்த விருப்பம் என்பதோடு மட்டுமல்லாமல், மற்றவர்களின் எதிர்பார்ப்புகளுக்காக யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hariharasudhan R

Recent Posts

இவர் வாய் விட்டால் விளங்குமா? குபேரா படத்துக்கு முதல் விமர்சனத்தை அள்ளித் தெளித்த பிரபலம்!

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…

17 minutes ago

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் அதிமுக.. திமுக அரசுக்கு எதிராக வெளியான அறிவிப்பு..!

திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…

42 minutes ago

பிச்சை எடுத்துப் பாருங்க அருமை புரியும்- நயன்தாராவை டார்கெட் செய்தாரா தனுஷ்?

நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…

1 hour ago

மாயமான 28 வயது பெண் : துடித்துடித்த 4 உயிர்கள்.. விசாரணையில் ஷாக்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்ன குளிப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லம்மாள்(65), அவரது மகள் காளீஸ்வரி (45), காளீஸ்வரியின் மகள்…

2 hours ago

ஆர்யா மீது வரி ஏய்ப்பு புகார்? வருமான வரித்துறையினரின் திடீர் சோதனைக்கு காரணம் என்ன?

ஆர்யாவுக்குச் செந்தமான உணவகங்கள் தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக கதாநாயகனாக வலம் வருபவர் ஆர்யா. தொடக்கத்தில் பல திரைப்படங்கள் அவரது…

2 hours ago

சினிமா மட்டுமல்ல… தொழிலிலும் மாஸ் காட்டும் ஆர்யா.. தலைசுற்ற வைக்கும் சொத்து மதிப்பு!

நடிகர் ஆர்யா ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கத்தில் வெளியான உள்ளம் கேட்குமே படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். என்னதான் அந்த படத்தில்…

3 hours ago

This website uses cookies.