லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்தை வைத்து “கூலி” திரைப்படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை தொடர்ந்து அவர் ஆமிர்கானை வைத்து பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தன. ஆனால் இது குறித்து லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஆமிர்கான், “லோகேஷ் கனகராஜும் நானும் ஒரு படத்திற்காக தயாராகி வருகிறோம். இத்திரைப்படம் ஒரு சூப்பர் ஹீரோ திரைப்படமாகும். மிகப் பெரிய பட்ஜெட்டில் இத்திரைப்படத்தை திட்டமிட்டு வருகிறோம். இத்திரைப்படம் 2026 ஆம் ஆண்டு தொடங்கப்பட உள்ளது” என கூறினார்.
இதன் மூலம் லோகேஷ் கனகராஜுடனான பிராஜெக்ட்டை உறுதி செய்துள்ளார் ஆமிர்கான். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ்-ஆமீர்கான் இணையும் திரைப்படத்தின் கதை குறித்த ஒரு சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது.
காமிக்ஸ் உலகில் “இரும்புக்கை மாயாவி” ஒரு பிரபலமான சூப்பர் ஹீரோ கதாபாத்திரமாகும். இந்த கதாபாத்திரத்தை வைத்து சூர்யாவுக்காக ஒரு கதையை லோகேஷ் கனகராஜ் தயார் செய்து வைத்திருந்ததாக ஒரு செய்தி பல வருடங்களாக உலா வந்தன.
அந்த வகையில் தற்போது இந்த கதையில்தான் ஆமிர்கான் நடிக்கவுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவுக்காக எழுதப்பட்ட கதையில் ஆமிர்கான் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது.
கலவையான விமர்சனம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரது நடிப்பில்…
திருப்பதி லட்டில் கலப்பட நெய் கலந்த விவகாரம் நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக திண்டுக்கல்லை சேர்ந்த ஏஆர்…
டிராப் ஆன வாடிவாசல் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “வாடிவாசல்” திரைப்படத்திற்கான அறிவிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்தது. ஆனால்…
அமெரிக்க அதிபர் கொண்டு வந்த Big Beautiful Bill என்ற வரிக்குறைவு மசோதாவுக்கு எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.…
திண்டுக்கல், நரிப்பாறை பகுதியைச் சேர்ந்த கருப்பையா மகன் ஸ்டாலின்(38). இவர் சமூக வலைதளங்களில் நக்சலைட்டுகளுக்கு ஆதரவாக தொடர்ச்சியாக கருத்து பதிவு…
தமிழ் சினிமாவுக்கு அடையாளம் கொடுத்த இயக்குநர்களின் இயக்குநர் பாரதிராஜா பங்கு பெரும்பங்கு. இவர் இயக்கிய படங்கள் கிராமத்து மண்வாசனையுடன் வீசி…
This website uses cookies.