சினிமா / TV

ஒரு நாயகன் உதயமாகிறான்; முதல் படத்திலேயே ஆக்சன் ஹீரோ? தீவிர பயிற்சியில் லோகேஷ் கனகராஜ்…

மோஸ்ட் வாண்டட் இயக்குனர்

இந்தியாவின் மோஸ்ட் வாண்டட் இயக்குனராக வலம் வருகிறார் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது ரஜினிகாந்தை வைத்து “கூலி” திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் ரஜினிகாந்துடன் ஸ்ருதிஹாசன், நாகர்ஜுனா, சௌபின், உபேந்திரா, சத்யராஜ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இத்திரைப்படம் ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

ஆமிர்கானுடன் இணையும் லோகி

“கூலி” திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தியை வைத்து “கைதி 2” திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இத்திரைப்படம் “கைதி”, “விக்ரம்”, “லியோ” ஆகிய திரைப்படங்களின் தொடர்ச்சியாக லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸுக்குள் உருவாகவுள்ளது. 

“கைதி 2” திரைப்படத்தை தொடர்ந்து ஆமிர்கானை வைத்து பாலிவுட்டில் ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கும் என ஆமிர்கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளாராம். 

முதல் படமே ஆக்சன் ஹீரோ

லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்கவுள்ள திரைப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளாராம். இவர் இதற்கு முன்பு “ராக்கி”, “சாணி காயிதம்”, “கேப்டன் மில்லர்” போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தையும் அருண் மாதேஸ்வரன் இயக்குவதாக இருந்தது. இந்த நிலையில்தான் இவர் லோகேஷ் கனகராஜ்ஜை ஹீரோவாக வைத்து படம் இயக்கப்போவதாக கூறப்படுகிறது. 

இத்திரைப்படத்தில் ஆக்சன் காட்சிகள் அதிகம் இடம்பெறவுள்ளதாம். மேலும் இத்திரைப்படத்திற்காக பாங்காக்கில் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்று வருகிறாராம் லோகேஷ் கனகராஜ். இவ்வாறு ஒரு அட்டகாசமான தகவல் வெளியாகியுள்ளது. தான் நடிக்கவுள்ள முதல் படத்திலேயே ஆக்சன் ஹீரோவாக களமிறங்கவுள்ளது ரசிகர்கள் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.