அரங்கம் அதிர ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது “கூலி” திரைப்படம். ரஜினிகாந்த்-லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்திற்கு அதிகளவு எதிர்பார்ப்பு உள்ளது. இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் கடந்த வாரம் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) வெளியானது. இத்திரைப்படத்தின் டிரெயிலரை டீகோட் செய்து வரும் ரசிகர்கள் இத்திரைப்படம் ஒரு டைம் டிராவல் திரைப்படம் என்று யூகித்து வருகின்றனர்.
“கூலி” திரைப்படம் உருவாவதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து ஒரு ஃபேண்டசி திரைப்படத்தை இயக்குவதாக இருந்தது. அதில் ரஜினிகாந்த் வில்லனாகவும் மற்ற நடிகர்கள் ஹீரோவாகவும் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ், “கூலி” திரைப்படம் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர், “கூலி திரைப்படம் ஃபேண்டசி கதை இல்லை. இது வேறு கதை. முதலில் நான் ரஜினிக்காக எழுதிய கதைதான் ஃபேண்டசி கதை. அதில் ஹீரோதான் வில்லனே. நான் வேறு ஒருவரை ஹீரோவாக தேடிக்கொண்டிருந்தேன். ரஜினிகாந்தும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
ஆனால் அந்த கதையை நான்தான் வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஏனென்றால் அந்த கதையை படமாக்க அதிக காலம் தேவைப்படும் என்பதாலும் நிறைய நடிகர்கள் அதில் நடிக்க வேண்டியதாக இருந்த காரணத்தினாலும் அந்த கதையை நான் வேண்டாம் என்று முடிவெடுத்துவிட்டேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.