சினிமா / TV

லோகேஷிடமிருந்து அந்த நடிகருக்கு பறக்கும் ஃபோன் கால், ஆனா நோ ரெஸ்பான்ஸ்? அடப்பாவமே

லோகேஷ் பட ஹீரோ

லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின் Post Production பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இத்திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகளில் மிகத் தீவிரமாக பணியாற்றி வருகிறார் இயக்குனர்.

லோகேஷ் கனகராஜ் தற்போது பல டாப் நடிகர்களின் படங்களை இயக்கி வருகிறார். எனினும் அவர் முதலில் இயக்கிய “மாநகரம்” திரைப்படம் மிகவும் சின்ன பட்ஜெட் திரைப்படமாகும். இதில் நடிகர் ஸ்ரீ கதாநாயகர்களில் ஒருவராக நடித்திருந்தார். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீ தற்போது சினிமாத்துறையையே விட்டு ஒதுங்கி வாழ்ந்து வருகிறார். மேலும் அவரது மனநிலை சரியில்லை என்று அவரது வீடியோக்களின் மூலம் தெரிய வருகிறது. அவர் மன அழுத்ததிற்காக மாத்திரைகள் எடுத்து வந்தார் எனவும் அவரது தோழி ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

தொடர்ந்து பறந்த ஃபோன் கால்…

ஸ்ரீயின் தோழர்கள் பலரும் அவரை தொடர்புகொள்ள முயன்று வருகிறார்கள். ஆனால் அவர் யார் அழைத்தாலும் பதிலளிக்க மறுக்கிறாராம். அவர் எங்கிருக்கிறார் என பலரும் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “கூலி” திரைப்படத்தின் பிசியான பணிகளுக்கு இடையிலும் ஸ்ரீயின் தொலைப்பேசி எண்ணிற்கு பல முறை ஃபோன் செய்தாராம். ஆனால் ஸ்ரீ பதிலளிக்கவே இல்லையாம். இடைவிடாது பணிகளுக்கு மத்தியில் ஸ்ரீயை எப்படியாவது தொடர்புகொள்ள வேண்டும் என லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.