பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் லாஸ்லியா – சிங்கிளா இருக்கும் சிம்புக்கு கிடைக்குமா அதிர்ஷ்டம்.?

Author: Rajesh
6 March 2022, 1:55 pm
Quick Share

பிக்பாஸ் சீசன் 5 நிறைவடைந்ததை தொடர்ந்து ஓடிடி தளத்திற்காக பிக்பாஸ் அல்டிமேட் எனும் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன் விலகியதையடுத்து தற்போது சிம்பு தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிகழ்ச்சியில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இதில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வாரூணி, ஷாரீக், அபிநய் ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில் வனிதாவும் வீட்டை விட்டு அனுப்பும்படி பிக்பாஸிடம் கதறி அழுது தானாக வெளியேறினார்.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை லாஸ்லியா மரியநேசன் வைல்ட் கார்டு எண்ட்ரி வழியாக செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

இதனிடையே சீசன் 3ல் கவினுடனான காதல், நட்பு என ரகளையாக வந்தவர் தான். தற்போது இருவரும் பிரிந்து விட்டனர். இதனையடுத்து லாஸ்லியா தமிழில் ஃப்ரண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் எதிர்பார்த்த அளவுக்கு பட வாய்ப்புகள் இல்லாததால் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லவுள்ளார்.

இந்த நிலையில் யாரையும் காதல் வலையில் வீழ்த்துவதில் வல்லவராக இருக்கும் லாஸ்லியா, சிங்கிளா இருக்கும் சிம்புவிற்கு காதல் வலை வீசுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்..

Views: - 657

1

0