பிரபல சின்னத்திரை நடிகர் மாதம்பட்டி ரங்கராஜன் மீது அவரது இரண்டாவது மனைவி ஜாய், சிவசங்கரி யூடியூப் சேனலில் அளித்த பேட்டியில் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இந்த பேட்டியில், தனது கணவர் மீதான குடும்ப வன்முறை மற்றும் உணர்ச்சி ரீதியான துன்புறுத்தல்கள் குறித்து ஜாய் கண்ணீருடன் வெளிப்படுத்தியுள்ளார்.ஜாயின் கூற்றுப்படி, தான் கர்ப்பமாக இருந்தபோது, மாதம்பட்டி ரங்கராஜன் அந்தக் குழந்தை வேண்டாம் என வற்புறுத்தியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
இருப்பினும், ஜாய் குழந்தையைப் பெற்றெடுப்பதில் உறுதியாக இருந்ததாகக் கூறினார். ஆனால், ஒரு சம்பவத்தில், மாதம்பட்டி ரங்கராஜன் தனது மகனின் முன்னிலையில் ஜாயை கடுமையாகத் தாக்கியதாகவும், இதனால் அவருக்கு காது கேளாமை மற்றும் ஒரு கண்ணின் பார்வை நரம்பு பாதிக்கப்பட்டு பார்வை குறைந்துவிட்டதாகவும் ஜாய் கதறி அழுதார்.
வலியால் துடித்த தன்னை, மாதம்பட்டி ரங்கராஜனே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், இந்தச் சம்பவம் தனது மகன் கண்முன்னே நடந்ததாகவும் அவர் கூறினார்.
இதையடுத்து, ஜாயின் குடும்பத்தினர் மாதம்பட்டி ரங்கராஜனை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயன்றபோது, அவர் அழைப்புகளை ஏற்கவில்லை என்று ஜாய் தெரிவித்தார். மேலும், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பு தளத்தில், மாதம்பட்டி ரங்கராஜன் தனது கேரவனில் வைத்து, தனது மேலாளரின் உதவியுடன் மீண்டும் தன்னைத் தாக்கியதாக ஜாய் குற்றம்சாட்டினார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, ஜாய் மாதம்பட்டி ரங்கராஜனின் காலில் விழுந்து கெஞ்சி, அவரைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்ததாகவும் கூறினார். ஆனால், ஒருநாள் படப்பிடிப்புக்குச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியேறிய மாதம்பட்டி ரங்கராஜன், அதன்பிறகு வீடு திரும்பவே இல்லை என்று ஜாய் கண்ணீருடன் தெரிவித்தார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.