பிரபல சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் சமீபத்தில் ஜாய் கிரிஸில்டா என்ற பிரபல ஆடை வடிவமைப்பாளரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். மேலும் ஜாய் கிரிஸில்டா தான் 6 மாதங்கள் கர்ப்பமாக இருப்பதாகவும் அறிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியது.
மாதம்பட்டி ரங்கராஜ்ஜின் முதல் மனைவியின் பெயர் ஸ்ருதி. இவர் ஒரு வழக்கறிஞர். இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில்தான் மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.
இதனிடையே ஸ்ருதியை முறையாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்துகொண்டதாக மாதம்பட்டி ரங்கராஜ் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அவரது முதல் மனைவியான ஸ்ருதி தனது கணவர் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறினார்.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இருவரும் இணைந்து அவ்விழாவில் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகியது.
இதனை தொடர்ந்து ஜாய் கிரிஸில்டா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தனக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார். அதாவது தனது குழந்தைக்கு ராஹா ரங்கராஜ் என பெயர் வைத்துள்ளார்.
இப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவ்வாறு முதல் மனைவியுடன் புகைப்படம், இரண்டாவது மனைவியின் குழந்தைக்கு பெயர் வைத்தல் என மாதம்பட்டி ரங்கராஜ் இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.