மெகந்தி சர்க்கஸ் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். அவர் பிரபல சமையல் கலைஞராகவும் உள்ளார். மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
பிரபலங்கள் வீட்டில் விசேஷம் என்றாலே, மாதம்பட்டியாரின் சமையல்தான், அந்தளவுக்கு இவர் சமையல் சுவையாக இருக்கும். இப்படி மெல்ல மெல்ல திரைத்துறையினர் மத்தியில் பிரபலமான மாதம்பட்டி பின்னர் ஒரு சில படங்களில் நடித்தார்.
அதன் பின்னர் அவருக்கு பிரபல தொலைக்காட்சியில் நடுவராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. சமையல் தொடர்பான நிகழ்ச்சி என்பதால் மாதம்பட்டியாரும் நடுவராக பங்கேற்றார்.
இதனிடையே மாதம்பட்டி ரங்கராஜ், இரண்டாவது திருமணம் செய்ததாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. அதில் இருந்த பெண் ஜாய் கிரிசில்டா, இவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்தானவர்.
திரைத்துறையில் ஜாய் கிரிசில்டா, பிரபலமானவர். காஸ்ட்யூம் டிசைனராக பல படங்களில் பணியாற்றியுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜின் அந்த சமையல் நிகழ்ச்சிக்கும், இவர் தான் காஸ்ட்யூம் டிசைனர் என கூறப்படுவதும் உண்டு.
இந்த நிலையில் இருவரின் திருமண போட்டோ வைரலாகியுதை தொடர்ந்து, ஜாய் கிரிசில்டா தான் கர்ப்பமாக இருப்பதாக அவ்வப்போது தனது எக்ஸ் தளத்தில் போட்டோவும் வெளியிட்டார்.
ஆனால் இது குறித்து மாதம்பட்டியார் தரப்பில் எந்த பதிலும் வரவில்லை. ஆனால் சமீபத்தில சென்னை காவல் ஆணையரிடம், ஜாய் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியது.
தான் 6 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், என் குழந்தைக்கு தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் தான், என்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிவிட்டார் என அடுக்கடுக்கான புகாரை கூறினார்.
இது குறித்தும் மாதம்பட்டி ரங்கராஜ் எந்த பதிலும் சொல்லாத நிலையில், ஜாய் கிரிசில்டா நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் தன்னுடன் பேசிய வீடியோ ஒன்றை போட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார். அதில், ஏய் பொண்டாட்டி, ஐ லவ்யூ.. இப்பதான் குளிச்சேன்.. என அந்த வீடியேவில் அவர் பேசியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.