சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் முழுக்க முழுக்க அனல் பறக்கும் Action திரைப்படமாக உருவாகியுள்ளது “மதராஸி”. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். இதில் வித்யுத் ஜம்வால் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் பிஜு மேனன், விக்ராந்த், ஷபீர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இத்திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரெயிலர் நேற்று வெளியானது. முழுக்க முழுக்க அனல் பறக்கும் இரத்தம் தெறிக்கும் ஆக்சன் அதகளமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளதாக டிரெயிலர் பார்க்கையில் தெரிய வருகிறது.
இத்திரைப்படத்தின் டிரெயிலரில் வித்யுத் ஜம்வால் ஒரு வசனம் பேசுகிறார். “துப்பாக்கி எவன் கையில் இருந்தாலும் வில்லன் நான் தான்டா” என்று கூறுகிறார். “GOAT” திரைப்படத்தில் சிவகார்த்திகேயனிடம் விஜய் “துப்பாக்கியை பிடிங்க சிவா” என்று கூறுவார்.
விஜய்யின் “துப்பாக்கி” திரைப்படத்தின் வில்லன் வித்யுத் ஜம்வால். அந்த வகையில்தான் இந்த வசனம் அமைந்துள்ளது என இணையத்தில் ரசிகர்கள் பலரும் பேசி வருகின்றனர். இந்த வசனம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.