சினிமா / TV

தள்ளிப்போகும் மதராஸி? தயாரிப்பாளர் எடுத்த முடிவால் முடிவாகாத  பிசினஸ்?

விரைவில் அதிரடி காட்டப்போகும் SK!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள “மதராஸி” திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். மேலும் இதில் வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஸ்ரீலட்சுமி பிரசாத் என்பவர் இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு அதிரடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வெளியீட்டில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

அப்படி என்ன சிக்கல்?

அதாவது “மதராஸி” திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமம் இன்னும் வியாபாரமே ஆகவில்லையாம். அதே போல் கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் திரையரங்கு உரிமமும் வியாபாரம் ஆகவில்லையாம். இத்திரைப்படத்திற்கான விலையை வழக்கமான சிவகார்த்திகேயன் படத்தை விட அதிகமாக நிர்ணயித்துள்ளாராம் தயாரிப்பாளர். 

சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான “அமரன்” திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்த காரணத்தினால் “மதராஸி” தயாரிப்பாளர் அதிக விலையை நிர்ணயித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆதலால் இவ்வளவு அதிக விலைக்கு வாங்க முடியாது என விநியோகஸ்தர்கள் கூறுகிறார்களாம். இதன் காரணமாக இதன் திரையரங்கு உரிமத்தின் வியாபாரம் தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறதாம். இதனால் இத்திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.