சினிமா / TV

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு

ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் இருந்த முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்களின் வரலாற்று பாடத்தை சமீபத்தில் நீக்கியது. மேலும் மகா கும்பமேளா, மேக் இன் இந்தியா போன்றவற்றை குறித்த பாடங்கள் புதிதாக சேர்க்கப்பட்டன. NCERT-ன் இந்த முடிவால் நாடு முழுவதும் பல மக்கள் கொந்தளித்துப்போயினர். பலரும் இந்த முடிவை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் நடிகர் மாதவன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.

எங்க வரலாறு எங்க?

“நான் பள்ளியில் படித்தபோது முகலாயர்கள் பற்றி 8 அத்தியாயங்கள் இடம்பெற்றிருந்தன. பிரிட்டிஷ் மற்றும் சுதந்திர போராட்டம் குறித்து நான்கு அத்தியாயங்களும் மொகஞ்சதாரோ ஹராப்பா பற்றி இரண்டு அத்தியாயங்களும் இடம்பெற்றிருந்தன. ஆனால் சோழர்கள், பாண்டியர்களை பற்றி ஒரே ஒரு அத்தியாயம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. 

பிரிட்டிஷாரும் முகலாயர்களும் நம்மை 800 வருடங்கள் ஆட்சி செய்தார்கள். ஆனால் சோழர்கள் 2400 வருடங்களுக்கு மேல் ஆட்சி செய்தனர். அவர்கள் வரலாறு எங்கே? 

சமணம், பௌத்தம், ஹிந்து மதம் போன்றவை சீனாவிற்கு பரவியது. கொரிய மக்களின் மொழியில் பாதி தமிழ் இருக்கிறது. எங்கள் மொழி அவ்வளவு தூரம் சென்றுள்ளது. ஆனால் இதை பற்றி எல்லாம் ஒரே அத்தியாயத்தில் உள்ளது. இப்படிப்பட்ட பாடத்திட்டத்தை யார் தீர்மானித்தது?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். மாதவன் பேசிய இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.