சிவகார்த்திகேயனை வைத்து “மாவீரன்” என்ற வித்தியாசமான படைப்பை கொடுத்த மடோன் அஷ்வின், அடுத்ததாக சீயான் விக்ரமை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமானார். இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது.
அதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் முன்கட்ட பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்றன. ஆனால் இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தை குறித்த ஒரு அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது இத்திரைப்படத்திற்காக எழுதப்பட்ட முழுக்கதையையும் கூறியபோது சீயான் விக்ரமிற்கு இரண்டாம் பாதியில் திருப்தி இல்லையாம். அதே போல் தயாரிப்பாளருக்கும் பிடிக்கவில்லையாம். இதனை தொடர்ந்து இரண்டாம் பாதியை மீண்டும் எழுதுவதற்காக மைசூர் சென்றிருக்கிறாராம் மடோன் அஷ்வின்.
ஒருவேளை அவர் எழுதிக்கொண்டிருக்கும் இரண்டாம் பாதிக்கான திரைக்கதை சீயான் விக்ரமிற்கும் தயாரிப்பாளருக்கும் பிடித்திருந்தால் இத்திரைப்படத்தை மடோன் அஷ்வின் இயக்குவார் இல்லை என்றால் அவர் இத்திரைப்படத்தில் இருந்து விலக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இச்செய்தி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வீடுகளுக்கு மட்டும் நிறுத்தினால் போதாது, மின்கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும் என பாமக செயல் தலைவர்…
நிதி ஆயோக் என்ற அமைப்பு கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. தேசிய வளர்ச்சியில் மாநிலங்களின் தீவிர ஈடுபாடு, கூட்டாட்சி, அரசியல்…
சூர்யா 46 சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் இறுகட்டப் படப்பிடிப்பு…
பெரிய பாய்னு கூப்புடாதீங்க ஏ.ஆர்.ரஹ்மானை அவரது ரசிகர்கள் பலரும் பெரிய பாய் என்று செல்லமாக குறிப்பிடுவது வழக்கம். அந்த வகையில்…
செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே கனரக லாரியை நிறுத்திவிட்டு அதன் ஓட்டுனர் டீ சாப்பிடுவதற்காக அருகில் இருந்த கடைக்கு சென்றுள்ளார் அப்போது…
மதுரை பாண்டிகோவில் சுற்றுச்சாலை அருகே ஜீன் 22 ஆம் தேதி இந்து முன்னணி சார்பில் முருகன் மாநாடு நடைபெறவுள்ளது, இம்மாநாட்டில்…
This website uses cookies.