சினிமா / TV

லோகேஷுக்கு உளவியல் சோதனைச் செய்யக் கோரிய மனு தள்ளுபடி.. லியோ வெளியாகி ஒரு வருடத்திற்குப் பிறகு உத்தரவு!

விஜயின், லியோ படத்தை தடை விதிக்கக் கோரிய மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்துள்ளது.

மதுரை: மதுரையைச் சேர்ந்த ராஜமுருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவில், “விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கெளதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், கடந்த 2023 அக்டோபர் 19ஆம் தேதி வெளியானது.

இந்தப் படத்தில் பெரும்பாலான காட்சிகள் வன்முறையை ஆதரிக்கும் வகையில் உள்ளது. குறிப்பாக, துப்பாக்கி, கத்தி, இரும்புக் கம்பிகளும், வீட்டிலேயே துப்பாக்கி மற்றும் வெடிபொருட்களைத் தயாரிப்பது பற்றியும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு மதச் சின்னங்களைப் பயன்படுத்தி, மதம் தொடர்பான முரண்பாடான கருத்துக்களையும், எதிரிகளைப் பழிவாங்க பெண்கள், குழந்தைகளைக் கொல்ல வேண்டும், போதைப்பொருள் பயன்படுத்துதல், மனிதர்களை துன்புறுத்துதல் உள்ளிட்ட வன்முறை மற்றும் பார்க்க தகுதியற்ற காட்சிகளும் அதிகம் உள்ளது.

இவற்றைப் பார்க்கும் இளம் சிறார்கள் தவறான பாதைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. இது போன்ற படங்களை தணிக்கைத் துறையினர் முறையாக ஆய்வு செய்ய வேண்டும். மேலும், இயக்குநர் லோகேஷ் கனகராஜை முறையாக உளவியல் பரிசோதனை செய்ய வேண்டும்.

எனவே, லியோ திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழு மீது வன்முறையைத் தூண்டும் வகையில் காட்சிகளை எடுத்து திரைப்படமாக்கியதற்கு, இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டங்களின் படி உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யவும், லியோ படத்தை முற்றிலும் தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: ‘அரசியலுக்காக குழப்பத்தை ஏற்படுத்தும் விஜய்’.. தமிழிசை கேள்வி!

இந்த நிலையில், இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் ஏ.டி.மரிய கிளாட் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, லியோ படக்குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல, விளம்பர நோக்கத்தோடு இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிடபட்டது. இதனையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.