சினிமா / TV

ராமாயணமா விடாமுயற்சி?.. மகிழ் திருமேனி பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்!

அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம், நவீன ராமாயணம் போன்று உள்ளது என்பதை குழுவினரிடம் கூறியதாக மகிழ் திருமேனி கூறியுள்ளார்.

சென்னை: அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் உலகெங்கும் இன்று வெளியாகியுள்ளது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு, தங்களது நடிகரை திரையில் காண ரசிகர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றனர். அது மட்டுமல்லாது, த்ரிஷா, ரெஜினா, ஆரவ், அனிருத் போன்ற படக்குழுவினரும் ரசிகர்கள் உடன் படத்தைப் பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனி பிரபல சர்வதேச ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. அதில், அவர், “இதையேத்தான் என் குழுவிடம் நானும் பேசிக் கொண்டிருந்தேன். கண்டிப்பாக அதனை அப்படிச் சொல்லலாம். நாங்கள் சொன்ன உதாரணமும் ராமாயணம் தான்” என விடாமுயற்சி படம் நவீன ராமாயணமாக உள்ளதாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மகிழ் திருமேனி பதிலளித்துள்ளார்.

மேலும், அஜர்பைஜானை தேர்ந்தெடுத்ததற்கான காரணத்தையும் மகிழ் திருமேனி விளக்கியுள்ளார். அதில், “இந்தப் படம் ஒரு சாலை வழிப்பயணம் போலத்தான். எங்களுக்கு நீண்ட நெடுஞ்சாலை, அதன் இரண்டு பக்கமும் வறண்ட பாலைவனம் போன்ற திறந்தவெளி என்ற இப்படியான ஒரு அமைப்பில் வெப்பமான, பாலைவனம் போன்ற ஒரு இடம் தேவைப்பட்டது.

அதற்கு அபுதாபி பொருத்தமாக இருக்கும் என்று நினைத்துதான் முதலில் நாங்கள் அங்கு சென்றோம். அப்படி, அபுதாபி, துபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய பகுதிகளில் நல்ல இடங்களும் கிடைத்தன.

ஆனால், நாங்கள் தேர்ந்தெடுத்த இடங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கான அனுமதி கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இன்னும் சில பிரச்னைகளும் அதில் இருந்தன. எனவே, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்தபோது தான் அஜர்பைஜான் நல்ல மாற்றாக இருக்கும் என்ற யோசனை தோன்றியது.

இதையும் படிங்க: கேரவனில் தமன்னாவுக்கு அப்படி..? கண்ணாடியைப் பார்த்த அந்த நொடி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

எனவே, அங்கு சென்று பார்த்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே இடங்கள் அங்கேயும் இருந்தன. தொடர்ந்து, அங்கேயே படப்பிடிப்பை நடத்தலாம் என்று முடிவு செய்தோம். அஜித்துக்கும், அந்தப் பகுதியின் புகைப்படங்கள், வீடியோக்களை அனுப்பி வைத்தோம். அவருக்கும் பிடித்திருந்தது.

எனவே, படப்பிடிப்பை அங்கு நடத்தினோம். தொடக்கத்தில் வானிலை காரணமாக இடையூறு ஏற்பட்டு தாமதமானாலும், படம் பார்க்கும்போது, அது இந்தக் கதைக்கு சரியான இடம் என்பது உங்களுக்கேத் தெரிய வரும்” எனத் தெரிவித்துள்ளார்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.