“கேஜிஎஃப்”, “காந்தாரா” போன்ற திரைப்படங்களை தயாரித்த ஹொம்பாலே நிறுவனம் “மகாவதார்” என்ற பெயரில் விஷ்ணுவின் 10 அவதாரங்களை வைத்து பல திரைப்படங்களை தயாரித்து வருகிறது. அதில் முதல் பாகமான “மகாவதார் நரசிம்மா” திரைப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இத்திரைப்படம் முழுக்க முழுக்க ஒரு அனிமேஷன் திரைப்படமாகும். நரசிம்ம அவதாரத்தை மையமாக வைத்து இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
இத்திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. குறிப்பாக வட இந்தியாவில் மக்கள் பலரும் பக்தி உணர்வோடு இத்திரைப்படத்தை திரையரங்குகளில் கண்டுகளித்தனர். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் வசூல் குறித்தான ஒரு தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூரவமாக வெளியிட்டுள்ளனர்.
அதாவது “மகாவதார் நரசிம்மா” திரைப்படம் உலகளவில் ரூ.300 கோடிகளை வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இத்திரைப்படம் ரூ.40 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளதாக கூறப்படும் நிலையில் வெளியான ஒரு மாத காலத்திற்குள் ரூ.300 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.