தமிழ் சினிமாவில் உன்னை தேடி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக பிரபலமானவர் தான் மாளவிகா. ஸ்வேதா மேனன் என்ற பெயரை இவர் மாளவிகா என்று மாற்றிக் கொண்டார். இப்படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை கொடுத்ததை அடுத்து, பல படங்களில் நடித்து வந்த இவர் மேஷ் மேனன் என்பவரை 2007 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு இரு குழந்தைகளை பெற்று சினிமாவில் இருக்கு விலகி இருந்தார். இதன்பின் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ள மாளவிகா கோல் படத்தின் மூலம் தமிழில் நடித்தார்.
இணையதளத்தில் ஆக்டிவாக இருந்தது புகைப்படங்களை பகிர்ந்து வரும் இவர் சமீபத்தில் கொடுத்துள்ள பேட்டி ஒன்றில், சினிமாவில் தனக்கு நடந்த கசப்பான சம்பவங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், இயக்குனரின் பெயரை குறிப்பிடாமல் அந்த இயக்குனர் கதை சொல்லும் போது வேறு மாதிரியும் படப்பிடிப்பு தளத்தில் அதற்கு மாற்றாக வேறு மாதிரி நடந்து கொண்டார்.
ஆனாலும், அதற்கு ஒப்புக் கொண்டு நடித்தேன். காட்சிகள் கூட முன்பே சொல்லாமல் அதை செய்ய சொல்லி பண்ணினேன். கதைக்கு முக்கியம் என்று இயக்குனர் கூறி சமாதானம் செய்து பண்ண வைத்தார். அதன் பின் தான் அந்த சீன் மிகவும் மோசமானதாக இருந்துள்ளது. அந்த இயக்குனர் யார் என்று கூற முடியாது. அதுதான் என்னுடைய கசப்பான அனுபவமாக இருந்தது. மேலும், நடிகர் விஜய்யுடன் குருவி படத்தில் ஒரு பாடலுக்கு ஆட சம்மதம் தெரிவித்தேன்.
அறிமுக பாடலுக்கு நடனமாட ஓகே சொன்ன சில மாதத்தில் நான் கர்ப்பமாகி விட்டேன். மூன்று மாதம் கர்ப்பமாக இருந்ததால், அப்பாடலில் நடனமாடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறினார்கள். அதனால், விஜய் படம் என்ற ஒரு காரணத்தால் விலகிக் கொள்ளாமல் அங்கும் இங்குமாக நடப்பது போல் தான் நடித்ததாகவும் மாளவிகா கூறியிருக்கிறார். இது தனக்கு ஏமாற்றமாக இருந்தாகவும் விஜய் தென்னிந்திய ரித்திக் ரோஷன் என்று மாளவிகா மீது கூறியுள்ளார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.