மலையாள சினிமாவின் முன்னணி ஹீரோ நடிகர் மம்முட்டி இவர் ஒரு புகைப்பட ஆர்வலர் மற்றும் புகைப்பட கலைஞர் இவர் எங்கு சென்றாலும் தன்னுடைய புகைப்பட கருவியையும் உடன் எடுத்துச் செல்வார்.
புகைப்படம் எடுப்பதில் இவருக்கு அலாதி பிரியம் உண்டு தன்னுடைய புகைப்படங்களை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் அவர் ஷேர் செய்வது உண்டு. அப்படி அவர் எடுத்த ஒரு புகைப்படம் இப்போது நெட்டிசன்களால் புகழப்பட்டு வருகிறது. கேரளாவைச் சேர்ந்த பறவையியல் நிபுணர் கே கே நீலகண்டன் நூற்றாண்டு விழாவில் மம்முட்டி எடுத்த புகைப்படம் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது இந்த கண்காட்சியில் பல பறவைகளின் புகைப்படம் இடம்பெற்று இருந்தது. இதில் நடிகர் மம்முட்டி எடுத்த ஒரு இலையின் நுனியில் புல்புல் பறவை அமர்ந்திருப்பது போன்ற புகைப்படமும் இடம் பெற்றிருந்தது.
அந்த புகைப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது இந்த புகைப்படத்தை மம்முட்டியின் ரசிகரான கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் மூன்று லட்சத்திற்கு ஏலம் எடுத்தார்.இந்த புகைப்படம் தன் மனதிற்கு மிகவும் நெருக்கமானது என தெரிவித்த அவர் இந்த புகைப்படத்தை தான் கட்ட உள்ள மூன்று நட்சத்திர ஹோட்டலில் வரவேற்பு அறையில் வைக்கப் போவதாக பூரிப்புடன் தெரிவித்தார்.ஏலத்தொகை மூன்று லட்சம் பறவைகள் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.