சினிமா / TV

மமிதா பைஜுவுக்கு வந்த வாழ்வு! அப்படி என்னதான் வசியம் வச்சிருக்காரோ? வாயைபிளக்கும் ரசிகர்கள்!

கியூட் நடிகை

2017 ஆம் ஆண்டு மலையாளத்தில் “சர்வோபரி பலக்காரன்” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மமிதா பைஜு. அதனை தொடர்ந்து “தாஹினி”, “வரதன்” போன்ற பல திரைப்படங்களில் நடித்த மமிதா பைஜு, “பிரேமலு” திரைப்படத்தின் மூலம் மிகப் பிரபலமானார். தமிழில் ஜிவி பிரகாஷின் “ரெபல்” திரைப்படத்தில் நடித்திருந்தார் மமிதா பைஜு. 

அதனை தொடர்ந்து தற்போது பல முன்னணி நடிகர்கள் திரைப்படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்து வரும் மமிதா பைஜு, அதனை தொடர்ந்து “இரண்டு வானம்” என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். 

இந்த நிலையில்தான் பிரதீப் ரங்கநாதனின் “Dude” திரைப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிப்பதாக அறிவிப்பு வெளிவந்தது. இவ்வாறு தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் ஒப்பந்தம் ஆகி வரும் மமிதா பைஜு தற்போது சூர்யா திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

சூர்யா 46

சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து தனது 46 ஆவது திரைப்படத்தில் “லக்கி பாஸ்கர்” இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் கைக்கோர்க்கவுள்ளார். இத்திரைப்படத்திற்கான தொடக்க பூஜை இன்று நடைபெற்றது. இதில் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கும் மமிதா பைஜுவும் கலந்துகொண்டார். 

“சூர்யா 46” திரைப்படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆன நிலையில் மமிதா பைஜுவின் வளர்ச்சியை பார்த்து ரசிகர்கள் பலரும் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளனர். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.