தூக்கத்தில் கதை கேட்டு வேண்டாம் என அனுப்பிய விஜய்.. வெறுப்பில் சென்ற இயக்குனர் வெளியிட்ட உண்மை..!

லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . அண்மையில் இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

குறிப்பாக பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பல நட்சத்திரங்கள் விஜய் பற்றிய தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குனர் மணி பாரதி விஜய், அஜித், சூர்யா பற்றி பல விஷயங்களை சித்ரா லக்ஷ்மணன் பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

அதில், விஜய்யுடன் நன்றாக பழகி இருந்து, இரண்டு முறை அவரிடம் கதை கூறி இருக்கிறேன். அவரது தந்தை SAC அவருடன் சேர்ந்து கதை கேட்பார். ஞாயிற்றுக்கிழமை அலுவலகத்திற்கு SAC வரச் சொல்லியதை மறந்துவிட்டார். அந்த சமயத்தில், விஜய் தூங்கி கொண்டு இருந்தார் அவரை எழுப்பி கூப்பிட்டு வரச் சொல்லி இருந்தார் . தூக்கத்தில் இருக்கும்போது எப்படி கதை புரியும் என்பதற்காகவே இன்னொரு நாள் வந்து சொல்லுங்கள் என்று கூறியும் மறுமுறையும் கதை கேட்டார் விஜய்.

கதையை கேட்டுவிட்டு அப்பாவிடம் சொல்லி விடுகிறேன். இரண்டு நாட்களில் சொல்கிறேன் என்று அனுப்பி வைத்தார். அதன் பின்னர் SAC என்னிடம் கதை எனக்கு பிடித்திருக்கிறது. விஜய்க்கு பிடிக்கவில்லை என்று கூறினார். உங்களுக்கு ஸ்கிரீன் பிளே நன்றாக இருக்கிறது. எதிர்காலத்தில் பண்ணலாம் என்று கூறினார். அதன் பின்னர் இரண்டாம் முறை வேறொரு கதையை கூறட்டுமா என்று கேட்டு ஒரு நாள் வர சொன்னதும் போனேன். சாரி இந்த கதையும் பிடிக்கவில்லை என்று தெரிவித்தார்.

ஆனால், இதுவரை 20 பேரை இயக்குனர் ஆக்கி இருப்பேன். அவர்கள் யாரையும் எனக்கு தெரியாது கதை பிடித்தால் நடிப்பேன் உங்களை இயக்குனராக ஆசைப்படுகிறேன் நீங்கள் எனக்கு பிடித்த மாதிரி கதை கூறாமல் இருக்கிறீர்கள் என்று விஜய் தன்னிடம் கூறியதாக மணி பாரதி தெரிவித்துள்ளார்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.