துல்கர் சல்மானை அவமானப்படுத்திய மணிரத்தினம்?.. தக் லைஃப் படத்தில் மீண்டும் இணைந்த ஹீரோக்கள்..!

உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.

திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். இரண்டுக்கும் மேற்பட்ட விவகாரத்து , பல நடிகைகளுடன் ரகசிய உறவு என இருந்த கமல் ஹாசன் தற்போது தலைமையில் தான் வாழ்ந்து வருகிறார். வயது 69 ஆகியும் நடிப்பு,தொலைக்காட்சி, அரசியல் என படு பிஸியாக இருந்து வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து இளம் ஹீரோக்களுக்கு திகில் கொடுத்து வருகிறார்.

தற்போது கமல் தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் “தக்லைஃப்” படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இந்த கூட்டணி ஏற்கனவே நாயகன் படத்தின் மிகப்பெரிய கிளாசிக் ஹிட் கொடுத்தனர். எத்தனை டான் படம் வந்தாலும் நாயகன் படத்தின் சாயல் இல்லாமல் இருக்காது. எனவே இவர்கள் மீண்டும் இணைந்து பணியாற்றுவதால் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி தக்லைஃப் படத்தில், திரிஷா, கௌதம் கார்த்திக் உட்பட பலர் நடித்து வருகின்றனர். அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக சர்பியா நாட்டிற்கு படக்குழு சொல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் துல்கர் சல்மான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது அவர் டேட் பிரச்சனை காரணமாக படத்ததில் இருந்து விலகி இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

அவருக்கு பதிலாக மணிரத்னம் யாரை தேர்வு செய்து நடிக்க வைக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையில், அவருக்கு பதிலாக நானியை நடிக்க வைக்க முயற்சிகளை படக்குழு மேற்கொண்டு வருவதாகவும், இந்த படம் நானிக்கு தமிழில் மிகப்பெரிய கம்பவுக்காக அமையும் என்றும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது சொல்ல வரும் விஷயம் என்னவென்றால், இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் காக அமெரிக்காவில் இருந்த கமல்ஹாசன் நேரடியாக இந்த படத்தின் ஷூட்டிங் காக செர்பியா செல்ல உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி இந்த ஷூட்டிங்கில் கமல் பங்கேற்க முடியவில்லை. மாறாக நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பணிகளில் ஈடுபடுவதற்காக அவர் அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பினார்.

இதனை தொடர்ந்து, அந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அடுத்த, மாதம் 19ஆம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அதை அடுத்து, கமலஹாசன் படங்களில் நடிக்க கவனம் செலுத்த முடியும் என்று கூறப்பட்டுள்ளது. இதனிடையே, செர்பியாவில் நடைபெற இருந்த ஷூட்டிங் கமலஹாசன் உடன் இணைந்து ஜெயம் ரவி நடிக்க உள்ளதாக முன்பே கூறப்பட்டது.

ஆனால், தற்போது வந்த தகவலின்படி அந்த ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, இன்னும் ஒரு மாத காலத்திற்கு பட குழுவினர் அடுத்த கட்டம் குறித்து திட்டமிட முடியாத நிலையில் உள்ளனர். இது போன்ற குளறுபடியினால் தான் முன்னதாகவே துல்கர் சல்மான் கால்ஷிப்ட் பிரச்சினையை காரணம் காட்டி படத்தில் இருந்து முன்னதாகவே விலகினார். தற்போது, ஜெயம் ரவியும் இந்த படத்தில் இருந்து இதே பிரச்சினையால் தான் விலகி உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது கூற வரும் விஷயம் என்னவென்றால் படத்தில் கமிட்டாகி நடிக்கவிருந்த துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகியோர் படத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது இருவரும் மீண்டும் படத்தில் இணைந்து விட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. துல்கர் சல்மானை தனது ஆபிசுக்கு அழைத்துள்ளார்.

மேலும் படிக்க: கலாநிதி மாறன் பொண்ண பாத்தா நமக்கு BP ஏறுது.. வைரலாகும் ரஜினி சொன்ன வார்த்தை..!(Video)

ஆனால், இயக்குனர் மணிரத்தினம் அதே ஆபீசில் இருந்து கொண்டு துல்கர் சல்மானிடம் வந்து பேசவில்லையாம். தன்னுடைய துணை இயக்குனரை அனுப்பி பேச வைத்தாராம். இதனால், கடுப்பாகி தான் படத்திலிருந்து வெளியேறிவிட்டார் என சொல்லப்பட்டது. பின் மணிரத்தினத்தின் மனைவியும் பிரபல நடிகையுமான சுகாசினி துல்கர் சல்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீண்டும் இப்படத்தில் இணைய வைத்துள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. ஆனால், மணிரத்தினம் அப்படி செய்யக்கூடிய நபர் இல்லை என்றும், இதே போல் ஒரு விஷயம் நடக்கவே இல்லை. இது முழுக்க பொய்யான தகவல் என தெரியவந்துள்ளது. மேலும் பதிதிரிகையாளர் ஒருவர் இதனை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: படுக்கையில் புரட்டி எடுத்த இளம் ஹீரோ… கும்பிடு போட்டு தலைதெறிக்க ஓடிய கீர்த்தி சுரேஷ்..!

மேலும், சிம்பு தக் லைப் படத்தில் இணைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இப்படத்தில் துல்கரின் வேடத்தில் நடிக்க முதலில் அணுகப்பட்ட சிம்பு இப்போது புதிதாக இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார். ஏற்கனவே, கமல் தயாரிப்பில் சிம்பு எஸ் டி ஆர் 48 படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. சிம்பு தக் லைப் படத்தில் நடித்திருப்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Poorni

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

7 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

7 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

7 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

8 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

9 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

10 hours ago

This website uses cookies.