சினிமா / TV

பிடிச்ச வேலையை என் வாயாலயே வேண்டாம்னு சொன்னேன்- மேடையில் கலங்கிய மணிமேகலை

விஜய் டிவியில் இருந்து விலகல்

90ஸ் கிட்களின் மனதிற்கு நெருக்கமான தொகுப்பாளினி என்றால் அது மணிமேகலைதான். முதலில் சன் மியூசிக் மூலம் தனது கெரியரை தொடங்கிய மணிமேகலை, அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்களுக்கு தொகுப்பாளினியாக இருந்தவர் “குக் வித் கோமாளி” நிகழ்ச்சியில் கோமாளியாக வந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

எனினும் “குக் வித் கோமாளி சீசன் 4” நிகழ்ச்சியின் பாதியிலேயே அவர் விலக அதன் பின் தொகுப்பாளினியாக கம்பேக் கொடுத்தார். அதன் பின் “குக் வித் கோமாளி சீசன் 5” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய மணிமேகலை இறுதி வாரம் நெருங்குவதற்கு முன்பே அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகினார். 

அந்நிகழ்ச்சியில் தான் விலகியதற்கு அதில் போட்டியாளராக கலந்துகொண்ட ஒருவர்தான் காரணம் என மணிமேகலை வீடியோ வெளியிட்டு இருந்தார். அந்த வீடியோவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் பிரியங்கா தேஷ்பாண்டேவை கைக்காட்டினார்கள். 

என் வாயாலயே வேலை வேண்டாம்னு சொல்லி…

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு விருது வழங்கும் விழாவில் மணிமேகலைக்கு சிறந்த என்டெர்டெயினருக்கான விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் பேசிய மணிமேகலை, “என்னை தெரிந்த பலருக்கும் தெரியும். எனக்கு தொகுப்பாளினி வேலை எவ்வளவு பிடிக்கும் என்று. எனக்கு ரொம்ப பிடித்த ஒரு வேலையை என் வாயாலயே எனக்கு வேண்டாம் என்று சொல்லவேண்டிய சூழல் எனக்கு வந்தது. நான் கனவில் கூட நினைக்கவில்லை, நான் அப்படி சொல்வேன் என்று. அப்படி சொல்லிவிட்டு வந்த பிறகு நான் எவ்வளவு அழுதேன் என்று எனக்குத்தான் தெரியும்” என்று பேசியது பலரது மனதையும் நெகிழவைத்தது.. 

மணிமேகலை தற்போது “ஜீ தமிழ்” தொலைக்காட்சியில் “டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 3” நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.