தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் சீனு ராமசாமி. கடைசியாக இவர் இயக்கத்தில் மாமனிதன் என்ற படம் வெளிவந்தது. வசூல் ரீதியாக இந்த படம் சரிவை சந்தித்தாலும் விமர்சனம் ரீதியாக இந்த படம் பல பாராட்டுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சீனு ராமசாமி குறித்து அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்திருக்கிறார் பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி. அதில், அவர் கூறும் போது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான இடம் பொருள் ஏவல் படத்தில் நடித்த பிரபல நடிகை மனிஷா யாதவ். இந்த படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்தது.
அந்த சமயத்தில், சீனு ராமசாமி அந்த நடிகைக்கு கடுமையான டார்ச்சர் கொடுத்து இருக்கிறார். இந்த விஷயத்தில், மனுஷா யாதவுக்கு ஒரு வாரத்திற்கு மேல் படத்தில் நடிக்க முடியவில்லையாம். அதனால், அங்கு இருந்து கிளம்பி வந்து விட்டார். அதன் பின்னர் எனக்கு போன் செய்து சீனு ராமசாமி எந்த மாதிரியான பாலியல் தொல்லைகளை கொடுத்தார் என்று என்னிடம் கூறினார்.
அந்த வாக்குமூலம் என்னிடம் இருக்கிறது. இது தான் சீனு ராமசாமியின் இன்னொரு முகம். பல இயக்குனர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று பிஸ்மி தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிஸ்மிக்கு பதிலடி கொடுத்த நடந்த உண்மையை உடைத்துள்ளார் சீனு ராமசாமி. இது குறித்த பதிவில்,
“வணக்கம், இவங்க தான் என்னால சினிமா விட்டே போயிட்டாங்கன்னு அண்ணன் ஒருத்தர் சொல்லுறார். ஒரு குப்பை கதை ஆடியோ விழாவில் நன்றி சொல்றாங்க. 10 வருஷம் நடிச்சுட்டு போயிருக்காங்க. திரும்ப வந்து என் படத்துல கூட நடிப்பாங்க. இடம் பொருள் ஏவல் திரைப்படம் விரைவில் வரும் என பதிவிட்டு பிஸ்மிக்கு பதிலடி கொடுத்து இருந்தார்.
எனவே, மனிஷா யாதவ்வும் இது குறித்து விரைவில் விளக்கம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டநிலையில், இதற்கு மனிஷா யாதவ் அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒரு விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், குப்பை கதை ஆடியோ லாஞ்சில் சீனு ராமசாமி மேடையில் அமர்ந்திருந்தார் தான் எல்லோருக்கும் நன்றி சொன்னதைப் போல் அவருக்கும் சொன்னேன். 9 வருடங்களுக்கு முன்பு நான் என்ன சொன்னேன்னோ அதில், உறுதியாக இருக்கிறேன். என்னிடம் தரக்குறைவாக நடந்து கொண்டவர்களிடம் மறுபடியும் எப்படி வேலை செய்ய முடியும். சீனு ராமசாமி உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் என்று பதிலடி கொடுத்துள்ளார்.
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
This website uses cookies.