சினிமா / TV

நடிகையை உருகி உருகி காதலித்த மனோஜ் பாரதிராஜா.. மனைவி செய்த தியாகம்!

இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் ஒரே ஒருமகனாக மனோஜ் பாரதி ராஜா நேற்று திடீர் மரணமடைந்தது திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் அவரது உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மனோஜ் பாரதிராஜா நடிகையை காதலித்து கரம்பிடித்த சில தகவல்களை தெரிந்து கொள்வோம். தாஜ்மஹால் படம் மூலம் தனது தந்தையின் இயக்கத்தில் சினிமாவில் அறிமுகமானார் மனோஜ்.

இதையும் படியுங்க: உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி பெண்ணுக்கு மிரட்டல்.. திருமணம் செய்ய மறுத்ததால் காவலர் வெறிச்செயல்!

பின்னர் அல்லி அர்ஜூனா, ஈரநிலம், சமுத்திரம் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் அவருக்கு பெரியதாக வாய்ப்பு கிடைக்கவில்லை.இதையடுத்து தனது தந்தையை போலவே இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

மார்கழி திங்கள் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவருக்கு தோல்விதான் கிடைத்தது. ஆனால் அவருக்கு பக்க பலமாக இருந்தது அவரது காதல் மனைவி நந்தனா தான். இவரும் தமிழில், ஏபிசிடி, சக்சஸ், சாதுர்யன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சாதுர்யன் படத்தில் நடித்த போது, மனோஜ் உடன் காதல் வயப்பட்டார். இந்த ஜோடியின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க, 2006ல் கேரளாவில் திருமணம் நடந்து, சென்னையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது.

திருமணத்திற்கு பின்னர் நந்தனா சினிமாவில் இருந்து விலகினார். இவர்களுக்கு ஆர்த்திகா மற்றும் மதிவதனி என இரு பெண் பிள்ளைகள். மூத்த மகள் ஆர்த்திகா இயக்குநராக உள்ளார். இவர் எடுத்த வெப்சீரியஸை பாரதி ராஜா பாராட்டியிருந்தார்.

இளையமகள் கல்லூரியில் படித்து வருகிறார். மனோஜின் தயாரிப்பு நிறுவனத்தை அவரது மனைவி நந்தனா கவனித்து வந்தார். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்து கொண்ட மனோஜ், நேற்று மாலை 6 மணிக்கு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.