‘மாஸ்டர்’ திரைப்படத்துக்கு பிறகு நடிகர் விஜயும், இயக்குனர் லோகேஷ் கனகராஜும் சேர்ந்த 2வது படம் ‛லியோ’. இந்த படத்தில் விஜய், த்ரிஷா, கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உள்பட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு நடுவே கடந்த மாதம் அக்டோபர் 19ல் தியேட்டர்களில் வெளியானது. இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.
கடந்த 12 நாட்கள் முடிவில் ரூ.540 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் தான் லியோ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடந்து முடிந்தது.
இந்த விழாவுக்கு ஏராளமான ரசிகர்கள் அங்கு குவிந்தனர். நடிகர் விஜய் அரசியலுக்கு வர உள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளி வரும் நிலையில் இவரது பேச்சு அதிகம் கவனிக்கப்பட்டது.
இந்த விழாவில் நடிகர் விஜய், ‛‛நான் ரெடி.. வரவா.. ” எனும் பாடல் மூலம் உரையை தொடங்கினார். விஜய் பேச தொடங்கியதும் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இதனால் நிகழ்ச்சி களைக்கட்டியது. இதையடுத்து நடிகர் விஜய் பேசினார். அப்போது பல சூப்பர் ஸ்டார் பட்டம் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
மேலும், லியோ வெற்றி விழாவில் மன்சூர் அலிகான் பேசுகையில், லியோ flashback பொய் என இயக்குனரே சொல்லிவிட்டார். பலரும் என்னிடம் அதைப் பற்றி கேட்கிறார்கள் என மன்சூர் அலிகான் பேசியிருக்கிறார்.
மேலும், விஜய் தமிழ்நாட்டில் நாளைய தீர்ப்பு என்றும், தமிழ் நாடு சீரழிந்து கிடக்கிறது என்றும், உங்கள நம்பிதான் நாடு இருக்கு எனவும், நாளைய தீர்பை எழுத தயாராகுங்கள் என்று மன்சூர் அலிகான் தெரிவித்து இருக்கிறார். இதேபோன்று படத்தில் இடம்பெற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் விழாவில் பேசியுள்ளனர்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.