ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பயங்கரவாதிகளின் 9 முகாம்களில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது இந்திய இராணுவம். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வரும் நிலையில் ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் போன்ற எல்லை மாநிலங்களில் தாக்குதல் தீவிரமடைந்துள்ளது. பாகிஸ்தானின் டிரோன்கள் பலவற்றை இந்திய இராணுவம் முறியடித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன.
இவ்வாறு போர் சூழலில் நாடு பதற்ற நிலையில் இருக்கும் சமயத்தில் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் திரைப்படம் எடுக்க 15க்கும் மேற்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியன் மோஷன் பிக்சர்ஸ் புரொட்யூசர் அசோஷியேஷனில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. “ஆபரேசன் சிந்தூர்” என்ற டைட்டிலை கைப்பற்ற ஜீ ஸ்டூடியோஸ், டி சீரிஸ் போன்ற மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்களும் இந்த போட்டியில் உள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று ரிலையன்ஸ் நிறுவனம் “ஆப்ரேஷன் சிந்தூர்” வர்த்தக முத்திரையாக பதிவு செய்ய விண்ணப்பம் அளித்திருந்தது. இதற்கு எதிர்ப்புகள் பலமாக இருந்த நிலையில் இந்த முடிவை திரும்பப் பெறுவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…
கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை…
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
This website uses cookies.