தமிழில் “சீடன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் உன்னி முகுந்தன். இதனை தொடர்ந்து மலையாள சினிமா உலகில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். தற்போது மலையாள சினிமா உலகின் முன்னணி கதாநாயகராக வளர்ந்துள்ளார் உன்னி முகுந்தன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “மார்கோ” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் வேறு ஒரு நடிகரின் திரைப்படத்தை புகழ்ந்ததற்காக தன்னை உன்னி முகுந்தன் தாக்கியதாக போலீஸில் புகார் அளித்துள்ளார் உன்னி முகுந்தனின் மேனேஜர் விபின் குமார்.
உன்னி முகுந்தனின் மேனேஜரான விபின் குமார், டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த 23 ஆம் தேதி வெளியான “நரிவேட்டா” திரைப்படத்தை புகழ்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக உன்னி முகுந்தன் விபின் குமாரை தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இது குறித்து கேரளாவின் திரிக்கக்கரா காவல் நிலையத்தில் விபின் குமார் அளித்த புகாரில், உன்னி முகுந்தன் அவரது அபார்ட்மெண்ட்டின் பார்க்கிங் பகுதியில் வைத்து தன்னை தாக்கியதாக கூறியுள்ளார். மேலும் தன்னை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் அப்புகாரில் விபின் குமார் குறிப்பிட்டுள்ளார்.
உன்னி முகுந்தன் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “கெட் செட் பேபி” என்ற திரைப்படம் சரியாக போகவில்லை என்பதால் அவர் மிகவும் விரக்தியில் இருந்ததாகவும் அவரிடம் பணியாற்றும் ஊழியர்களிடம் அவர் மிகவும் மோசமாக நடந்துகொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.விபின் குமார் அளித்த புகாரை தொடர்ந்து உன்னி முகுந்தனின் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மலையாள சினிமா உலகை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.