காக்கா குஞ்சி மாதிரி பொறந்தேனு கொல்ல பார்த்தாங்க – அம்மாவை குறித்து மாரி செல்வராஜ்!

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் ஆகிய படங்கள் மூலம் வாழ்க்கையின் வலிகளையும் வேதனைகளையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தும் தமிழ்த்திரையுலகில் சிறந்த படைப்பாளியான மாரி செல்வராஜ் இயக்கத்தில் தற்போது வெளிவந்து தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் தான் “வாழை”.

இந்த திரைப்படம் மாரி செல்வராஜ் தனது சிறு வயது வாழ்க்கையை மையப்படுத்தி…வலிகளையும் வேதனைகளையும் உள்ளடக்கி எடுத்து இருக்கிறார். இந்த திரைப்படத்தை பார்த்த எல்லோருமே கண் கலங்கி மன வேதனைடன் வெளியில் வருவதை நம்மால் பார்க்க முடிகிறது.

திரையரங்கில் இருந்து வெளியில் வரும் எல்லோருமே கனத்த இதயத்தோடு வந்து பேட்டி கொடுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. அந்த வகையில் முன்னதாக இப்படத்தை பார்த்த இயக்குனர் பாலா தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் கலங்கி அழுது மாரி செல்வராஜை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.தொடர்ந்து பல திரைபிரபலங்கள் வாழை படத்திற்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கும் மாரி செல்வராஜ் நான் என் குடும்பத்தில் ஐந்தாவது பிள்ளையாக பிறந்தேன். அப்போது கன்னங்கரேல்னு காக்கா குஞ்சு மாதிரி கருப்பாக இருப்பேன். அந்த சமயத்தில் எல்லோரும் என் அம்மாவிடம் இந்த குழந்தை கொன்றுவிடு ஐந்தாவது பிள்ளை குடும்பத்தை பஞ்சா பறக்கடிச்சிடுவான் அப்படின்னு சொல்லி எல்லாரும் நெல் மணியை போட்டு கொன்னுட சொல்லியிருக்காங்க.

ஆனால், எங்க அம்மா சொன்ன ஒரு வார்த்தை தான் எனக்கு அடிக்கடி ஞாபகத்துக்கு வரும். அதாவது மத்த பிள்ளைகளை என்னுடைய பிள்ளையா பெத்தேன். ஆனால் இவனை மட்டும் தான் என் புருஷனையே பிள்ளையா பெத்திருக்கேன் அப்படின்னு எங்க அம்மா சொன்னாங்களாம். நான் நிறைய வாழ்க்கையில அவங்களுக்கு கஷ்டத்தை கொடுத்திருக்கேன்.

அவங்கள சஞ்சல படுத்திருக்கேன். கண்ணீர் வர வச்சிருக்கேன் அவன் என்ன பண்ண போறான்? வாழ்க்கையில் எப்படி இருக்க போறான்? எப்படி பொழைக்க போறான் என எங்க அம்மாவுக்கு என்ன பத்தின கவலை நிறைய இருந்துச்சு. உண்மையிலேயே நான் அவங்க சொன்ன மாதிரி நிறைய கஷ்டப்படுத்தி இருக்கேன். ஆனால். என்னை பெருசா நம்பினாங்க. இப்பதான் அதிலிருந்து கொஞ்சம் அவங்க மீண்டு வந்திருக்காங்க என மாரி செல்வராஜ் மிகவும் உருக்கமாக பேசி இருந்தார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.