சினிமா / TV

என் பையன் காணாமல் போய்ட்டான்; எல்லாம் முடிஞ்சிடுச்சு?- உணர்ச்சிப் பிழம்பாய் வெடித்த மாரி செல்வராஜ்!

சிறந்த இயக்குனர்…

தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களுள் ஒருவராக வலம் வருகிறார் மாரி செல்வராஜ். சமீபத்தில் “வாழை” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கணக்க வைத்த மாரி செல்வராஜ், அடுத்ததாக தனுஷை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் ராமின் “பறந்து போ” என்ற திரைப்படத்தின் டிரெயிலர் வெளியீட்டு விழாவில் மாரி செல்வராஜ் கலந்துகொண்டார். அவ்விழாவில் [பேசிய மாரி செல்வராஜ் ஜப்பானிற்கு தான் சென்றபோது தனது மகன் காணாமல் போனது குறித்த அதிர்ச்சி சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். 

மகனை காணவில்லை…

“ஜப்பானுக்குச் சுற்றுலா சென்றபோது ஒரு நாள் எனது மகன் சோர்வாக இருக்கிறான் என்று அவனை ஹோட்டல் அறையில் தூங்க வைத்துவிட்டு துணைக்கு அவனது பாட்டியையும் விட்டுவிட்டு நாங்கள் ஒரு ஜப்பான் நண்பரை பார்க்கச் சென்றிருந்தோம். நண்பரிடம் பேசிவிட்டு காரில் ஹோட்டலுக்கு திரும்பி வரும்போது ‘உங்கள் பையனை காணவில்லை’ என்று ஒரு ஃபோன் வந்தது.  

அதை கேட்டதும் எனக்கு என்ன ரியாக்ட் செய்வது என்றே தெரியவில்லை. எனக்கு பயம் வந்துவிட்டது. வாழ்க்கையில் ஒரு பெரிய துன்பத்திற்கு நாம் தயாராகப்போகிறோம் என்று நினைத்துக்கொண்டேன். வேகமாக ஹோட்டலுக்கு வந்தபோது வரவேற்பறையில் இரண்டு ஜப்பான் Aunty-களுடன் எனது மகன் சிரித்துப்பேசிக்கொண்டிருந்தான். அவனுக்கு மூன்றரை வயதுதான் ஆகிறது. அவன் என்னை பார்த்ததும் ஓடிவந்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன. 

‘நீ எங்க போன?’ என என்னிடம் கேட்டான். நான் நண்பரை பார்க்கப் போயிருந்ததாக கூறினேன். அதன் பின் அவனிடம் என்ன நடந்தது என கேட்டேன். அப்போதுதான் அவன் கூறினான். அதாவது அவனது பாட்டிக்கு ஒரு தனி அறை எடுத்திருந்தோம். நாங்கள் இன்னொரு அறையில் இருந்தோம். பாட்டி அறையில் தூங்கிக்கொண்டிருந்தவன் சில மணிநேரங்கள் கழித்து கண் விழித்திருக்கிறான். அப்பாவை காணவில்லையே என தேடிய அவன், பாட்டிக்குத் தெரியாமல் ஷூ, ஆடைகள் எல்லாம் மாட்டிக்கொண்டு அறைக்கு வெளியே வந்து கதவை மூடிவிட்டு எனது அறைக்கு வந்திருக்கிறான். 

எனது அறை பூட்டி இருந்தது என்பதால் மீண்டும் பாட்டி அறைக்கு சென்றிருக்கிறான். அந்த கதவும் லாக் ஆகிவிட்டதால் அவனால் திறக்க முடியவில்லை. அதனால் என்ன செய்வது என தெரியாமல் அந்த ஹோட்டலின் Corridor-ல் அலைந்துகொண்டு இருந்திருக்கிறான். அங்கிருந்த ஒவ்வொரு அறையின் கதவையும் தட்டியிருக்கிறான். ஆனால் எவரும் திறக்கவில்லை. அப்போது ஒரே ஒரு அறையில் உள்ளவர்கள் மட்டும் கதவை திறந்திருக்கின்றனர். அவர்களிடம் இயக்குனர் மாரி செல்வராஜின் மகன் நான்  என எழுதிக்காட்டியிருக்கிறான். எனது மகனின் நிலைமையை புரிந்துகொண்ட அவர்கள் அவனை அழைத்துச் சென்று அந்த ஹோட்டல் ஊழியர்களிடம் ஒப்படைத்திருக்கிறார்கள். இந்த சம்பவத்தை உடனே ஃபோன் செய்து ராமிடம் கூறினேன். அவர் சிரித்து உருண்டுக்கொண்டிருந்தார். ‘இதன் பிறகு உன்னுடைய சினிமா மாறும், மொழி மாறும், சமூகத்தின் மீது உனக்கு நம்பிக்கை பிறக்கும், உனது மகன் இந்த சமூகத்தின் மீதான உனது பார்வையை மாற்றுவான், ஒரு பெரிய நம்பிக்கையை கொடுப்பான்’ என்று ராம் கூறினார்” என மாரி செல்வராஜ் உணர்ச்சிகரமாக அச்சம்பவத்தை பகிர்ந்துகொண்டார். 

Arun Prasad

Recent Posts

விஜயகாந்தை கேவலப்படுத்திட்டாங்க? இதை AI னு சொன்னா AI-ஏ நம்பாது? படை தலைவன் பார்த்து கடுப்பான பிரபலம்…

படை தலைவனாக சண்முக பாண்டியன் விஜயகாந்தின் மகனான சண்முகப் பாண்டியனின் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “படை தலைவன்”.…

1 hour ago

அண்ணனுக்கு 30 லட்சம் Bill-அ போடு- விக்ரம் படத்தின் பாடலால் தயாரிப்பாளருக்கு  வந்த வினை!

ஒரு பாட்டு வச்சது குத்தமா? சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…

3 hours ago

திமுகவில் இருந்து விலகுகிறதா முக்கிய கட்சி? தவெகவுடன் இணைய 3 கட்சிகள் பேச்சுவார்த்தை?!!

அடுத்த ஆண்டு தமிழக சட்டப்பேரவை நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக தேர்தல் பணிகளை முடக்கி…

3 hours ago

துரை தயாநிதி வழக்கில் கோர்ட் செக்? அமலாக்கத்துறைக்கு பச்சைக்கொடி!

மதுரை மாவட்டம் மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக கிரானைட் கற்கள் எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி…

4 hours ago

படம் வெளியாகி அரை மணி நேரத்துல ட்ரோல்; எல்லாமே அரசியல்- தக் லைஃப்க்கு முட்டுக்கொடுக்கும் பிரபலம்?

எங்கு திரும்பினாலும் டிரோல் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரது…

4 hours ago

மணிரத்னம் இதை மட்டும் பண்ணிருந்தார்னா?- பாட்டு பாடி ரிவ்யூ வீடியோ வெளியிட்ட மன்சூர் அலிகான்

தோல்வி திரைப்படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலரது நடிப்பில்…

5 hours ago

This website uses cookies.