தமிழ் சினிமாவில் சில நல்ல படங்கள் வந்து ரசிகர்களை மகிழ்ச்சி படுத்துவது போன்றே சில தோல்வி படங்கள் வெளியாவதும் வழக்கம். எல்லோரும், எல்லா சமயத்திலும் வெற்றிகளையே கொடுக்க முடியாது. சில நேரங்களில் சில தோல்விகளை சந்தித்து தான் கடந்துச்செல்லவேண்டும். ஆனால், இதனை சிலர் ஏற்றுக்கொள்ளமுடியாமல் தோல்வி பட நடிகர்கள் மீது வெறுப்பை திணித்து வருகிறார்கள்.
அப்படித்தான் பிரபலமான திரைப்பட விமர்சகராக இருந்து வருபவர் ப்ளூ சட்டை மாறன். இவர் ரஜினியின் சில தோல்வி படங்களை மோசமாக விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்தார். அதுவே படத்தின் மிகப்பெரிய தோல்விக்கு காரணமாக அமைந்தது. இதனால் ரஜினி ப்ளூ சட்டை மாறன் மீது ரஜினி மிகுந்த கோபத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இப்படியான நேரத்தில் ஜெயிலர் படம் உருவாகி ரிலீசுக்கு தயாராக இருந்த நேரத்தில் ரஜினி இமயமலை போவதற்கு முன் ப்ளூ சட்டை மாறனை படம் பார்க்க நம்பிக்கைக்குரிய ஒரு பத்திரிக்கையாளரான செய்யாறு பாலுவிடம் சொல்லி அழைத்ததாகவும் அதற்கு முதலில் பயந்து வர மறுத்துவிட்டாராம் ப்ளூ சட்டை மாறன்.
பின்னர் செய்யாறு பாலு ரஜினி மிகவும் நல்லவர். அவர் மன்னிக்கும் குணமுடையவர் என கூற பின்னர் வருகிறேன் என ஒப்புக்கொண்டாராம் ப்ளூ சட்டை மாறன். ஆனால் ஒரு கண்டீஷன், நான் அங்கு நடைபெறும் சந்திப்பை போனில் வீடியோ எடுப்பேன் அதற்கு சம்மதம் கொடுங்கள் என கேட்டாராம். ஓகே எடுக்கலாம் ஒரு பொதுத்தளத்திலும் வெளியிடவே கூடாது என கையெழுத்து போடவேண்டும் என ரஜினி தரப்பு ஒப்புதல் வாங்கிக்கொண்டதாம்.
பின்னர் இது குறித்து பதிவிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், ரஜினி உடனான இந்த சந்திப்பு ஒரு கசப்பான அனுபவம் . எனவே அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை நான் மீற போகிறேன் (வீடியோ வெளியிடுதல்). இன்று காலை 11 மணியளவில் ட்விட்டர் பக்கத்தில் வீடியோ காட்சிகள் பகிரப்படும். அதன் விளைவுகள் என்னவாக இருந்தாலும் நான் சந்திக்க தயார்.நேர்மையான மற்றும் பாரபட்சமற்ற நபர்களை நான் எப்போதும் நம்புகிறேன். தயவு செய்து காணொளியை பார்த்து நேரடியாக கருத்து தெரிவிக்கவும்” என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.