சினிமா / TV

100 கோடி சிக்கலில் நயன்தாரா.. சுந்தர்.சியின் 13 வருட கதை கைகொடுக்குமா?

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாக உள்ள மூக்குத்தி அம்மன் 2 படம் 100 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: ‘மதகஜராஜா’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு, பல்வேறு படங்களுக்கு சுந்தர்.சியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதனிடையே, முன்பே ஒப்பந்தமான ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தின் கதையின் விவாதப் பணிகளும் முடிவு பெறும் நிலையில் உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தினை 100 கோடி ரூபாய் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்க வேல்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஆனால் மூக்குத்தி அம்மன் 2 எப்போது தொடங்கும், யாரெல்லாம் அதில் நடிக்கின்றனர் என்பது இதுவரை முடிவாகவில்லை.

காரணம், அது குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால், மூக்குத்தி அம்மன் படத்தின் முதல் பாகம் போலவே, அம்மனாக நயன்தாரா மட்டும் நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது. மேலும், விரைவில் இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, ஆர்.ஜே.பாலாஜி தயாரிப்பில் ஊர்வசி, நயன்தாரா, ஸ்மிருதி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் மூக்குத்தி அம்மன். இதில் நாயகனாக மட்டுமன்றி, ஆர் ஜே பாலாஜி இயக்கியும் இருந்தார். இதன் மாபெரும் வரவேற்பால், தற்போது அதன் இரண்டாம் பாகமும் உருவாகிறது.

இதையும் படிங்க: பிரபாகரனே பெரியாரை ஏற்றுக்கொண்டாலும் நானும் என் தம்பிகளும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் : சீமான்!

ஆனால், மூக்குத்தி அம்மன் 2 படத்தினை ஆர்.ஜே.பாலாஜி இயக்காமல் சுந்தர்.சி இயக்க உள்ளார். மேலும், ஆர் ஜே பாலாஜி நடிப்பில் கடைசியாக சொர்க்கவாசல் என்ற படம் வெளியானது. இப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.