M.R.ராதா தன்னை தானே சுட்டுக்கொண்டார்?.. – உண்மையை வெளிப்படையாக கூறிய ராதா ரவி..!

சினிமாவில் எத்தனையோ சம்பவங்கள் மறைமுகமாக நடந்திருந்தாலும் அதற்கு சரியான தீர்வு காணாமல் கண்ணும் காதுமாய் வைத்து மறைத்து விடுவார்கள். அப்படித்தான் நடிகரும் அரசியல்வாதிமான MGR-ஆரின் துப்பாக்கி சூடு சம்பவம் என்ன ஆனது என்று இதுவரை யாரும் அறியாத சம்பவமாக 55 ஆண்டுகளாக மறைக்கப்பட்டு உள்ளது.

அந்த காலத்தில் எம்ஜிஆர் மற்றும் எம்ஆர் ராதா நெருங்கிய நண்பர்களாக இருந்தது அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி இருக்கும பொழுது ஏன் திடீரென்று MR ராதா துப்பாக்கியால் சுட்டார் என்பது இன்றுவரை பலருக்கும் பெரிய குழப்பமாகத்தான் இருந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளக் கூடாது என்று அவரையும் சுட்டுக் கொண்டு தற்கொலைக்கு முயற்சித்து இருக்கிறார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இரண்டு பேருமே உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து, போலீசார் விசாரணையில் அவர்களுக்குள் இருந்த பல பிரச்சனையால் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணமாகத்தான் துப்பாக்கி சூடு நடந்தபட்டதாக வழக்கு ஆரம்பித்து MR ராதாவுக்கு ஐந்தாண்டு காலம் சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் தீர்ப்பு வழங்குவதற்கு முன்னதாக இவரிடம் கேட்டபோது அதற்கு நக்கலாக பதில் கொடுத்திருக்கிறார்.

MR ராதாவிடம் ஏன் நீங்கள் MGRரை சுட்டீர்கள் என்று கேட்டதற்கு ஏன் நான் சுட கூடாதா நானும் எம்ஜிஆரும் நண்பர்கள் தான் என்றும், புருஷன் பொண்டாட்டி சண்டை போடறது இல்லையா, அண்ணன் தம்பிக்குள் சண்டை வருது இல்லையா அதே மாதிரி தான் நாங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டோம் என்று நக்கலாக பதில் அளித்துள்ளார்.

மேலும் அவர், என்ன கத்தி இருந்தா கத்தி சண்டை, கம்பு இருந்தா கம்பு சண்டை, எங்களுக்கு அந்த ரெண்டும் இல்லாததால் துப்பாக்கி மட்டும்தான் இருந்தது என்று பதில் கொடுத்து உள்ளார். அதனால் துப்பாக்கி சண்டை போட்டுக்கிட்டு துப்பாக்கியால் சுட்டு விட்டேன் என்றும், இது ஒரு பெரிய விஷயமா பேசிக்கிட்டு குத்தம் கண்டுபிடிக்கிறீங்க போவீங்களா என்று நக்கலாக பேசிட்டு ஜெயிலுக்கு சென்று இருக்கிறார்.

இதனையடுத்து, கொஞ்ச நாட்கள் கழித்து பெரியார் இறப்பிற்கு பரோலில் வந்த MR ராதா, MGR ரை பார்த்து என்ன ராமச்சந்திரா எப்படி இருக்கிறாய் என்று கேட்டு என்ன அரசியலில் போய் சேரப் போகிறாயா என்று கேட்டு இருக்கிறார். அதற்கு MGR ஆமா அண்ணன் என்று தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, உடனே அங்கு இருந்தவர்கள் மறுபடியும் ஏதாவது பிரச்சனை வந்திடக் கூடாது என்று இவரையும், கைதாங்களா கூப்பிட்டு வரும்போது நக்கலாக MR ராதா இன்னும் இரண்டு குண்டு சேர்த்தே சுட்டிருக்கலாமோ என்று கிண்டல் அடித்து இருக்கிறார்.

இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் ராதா ரவி பல விசயங்களை தெரிவித்து இருக்கிறார். தன்னுடைய அப்பா புரட்சி தலைவரின் நெருங்கி நண்பர் என்றும், வாசு என்ற தயாரிப்பாளர் தன் அப்பாவிடம் 1 லட்சம் பணமும் எம் ஜி ஆரின் கால்ஷீட்டையும் கேட்டு பெற்றுக்கொண்டார். பெற்றால் தான் பிள்ளை படம் எங்க அப்பாவுக்கு 100வது படம் என்றும், ஆலந்தூர் சேட்டிடன் தங்களுடைய தோட்ட பத்திரத்தை வைத்து 1 லட்சம் ரூபாய் கொடுத்தார்.

அதன்பின் அந்த பணத்தை வாசு தானே தரவேண்டும், அப்போது எம் ஜி ஆர், தான் தருகிறேன் என்று கூறினார். 1967ல் தன் அப்பா எம் ஜி ஆரை சுட்டுவிட்டு ரத்தக்கரையுடன் போலிஸ் நிலையத்தில் புகாரளித்தார். ஆனால் அப்போதைய ஆட்சி மாறியதால் தன் அப்பா கொடுத்த புகார் மறைக்கப்பட்டது. தன் அப்பா தான் தான் சுட்டேன்னு சொன்னார்.

ஒரு ஷாட் மண்டையை தெரித்துக்கொண்டது, இன்னொரு ஷாட் கழுத்தில் எப்படி வந்தது. அதன்பின், 7 வருடம் என்பது 3 வருஷமாகி வெளியில் வந்தார். அப்போது கலைஞர் முதலமைச்சராக இருந்ததால் தன் அப்பா வெளியில் வந்தார். இல்லை என்றால் உள்ளையே முடித்திருப்பார்கள் என்று ராதா ரவி தெரிவித்துள்ளார். இனிமேல் யாராக இருந்தாலும், எம் ஆர் ராதா எம்ஜிஆரை ஏன் சுட்டார் என்று எழுதாதீர்கள் என்று தெரிவித்து உள்ளார்.

Poorni

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

14 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

14 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

14 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

15 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

16 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

17 hours ago

This website uses cookies.