சினிமா / TV

ஹைதராபாத் படப்பிடிப்பில் மிருணாள் தாக்கூருக்கு காயம்? பதறிப்போன படக்குழுவினர்!

சீரியல் டூ சினிமா!

ஹிந்தி சீரியல்களின் மூலம் ரசிகர்களின் மத்தியில் அறிமுகமானவர்தான் மிருணாள் தாக்கூர். அதனை தொடர்ந்து மராத்தி திரையுலகில் அறிமுகமான அவர், ஹிந்தி, தெலுங்கு போன்ற மொழிகளில் நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது “Dacoit: A Love Story” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். 

இத்திரைப்படம் தெலுங்கு, ஹிந்தி என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் அதிவி சேஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ஒரு ஆக்சன் கலந்த காதல் திரைப்படமாக இது உருவாகி வருகிறது. 

மிருணாள் தாக்கூருக்கு காயம்?

இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் சண்டை காட்சிகளை படமாக்கியபோது மிருணாள் தாக்கூர், அதிவி சேஷ் ஆகிய இருவருக்குமே காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் அதிவி சேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டதாம். அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசென்றனராம். எனினும் மிருணாள் தாக்கூருக்கு லேசான காயம்தானாம். 

இருப்பினும் இருவரும் சிகிச்சை எடுத்தக்கொண்ட பின் சில நிமிடங்களிலேயே மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டனர். இருவரும் நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. “Dacoit: A Love Story” திரைப்படத்தில் முதலில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக ஒப்பந்தமாகியிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் படத்தில் இருந்து விலகிவிட்டார். அதன் பிறகு மிருணாள் தாக்கூர் இப்படத்தில் ஒப்பந்தமானார். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.