தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக வலம் வந்த முரளி, கோலிவுட் வரலாற்றில் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகராக வலம் வந்தவர். இவர் நடித்த பல திரைப்படங்கள் காலத்தை தாண்டியும் மனதில் நிற்கக்கூடியவை. இவர் கடைசியாக ஹீரோவாக நடித்த திரைப்படம் “நீ உன்னை அறிந்தால்”. இதனை தொடர்ந்து தனது மகன் அதர்வா நடித்த “பாணா காத்தாடி” திரைப்படத்தில் கேமியோ ரோலில் வந்து சென்றார்.
பல திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த முரளி, 2010 ஆம் ஆண்டு தனது 46 ஆவது வயதில் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல பத்திரிக்கையாளரான சபிதா ஜோசஃப் முரளி குறித்த ஒரு அதிர்ச்சியான தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது முரளி, சிவரஞ்சனி என்ற நடிகையை ஒரு தலையாக காதலித்தாராம். அதுவும் முரளிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அதர்வாவும் பிறந்துவிட்ட பிறகு அவர் சிவரஞ்சனியை காதலித்தாராம். “நாம் திருமணம் செய்துகொள்ளலாமா?” என்று கேட்கும் அளவுக்கு முரளி போய்விட்டாராம். ஆனால் சிவரஞ்சனி ஒப்புக்கொள்ளவில்லையாம்.
ஆதலால் அடிக்கடி மது குடிக்கும் பழக்கம் அவருக்கு வந்துவிட்டதாம். இந்த பழக்கும் அத்துமீறிப்போய் படப்பிடிப்புத் தளத்திற்கும் மது குடித்துவிட்டு வரும் வழக்கமும் வந்துவிட்டதாம். ஆதலால் சண்டைக் காட்சிகளிலோ ஹீரோயினுடனான ரொமான்ஸ் காட்சிகளிலோ அவரால் ஈடுபாடுடன் நடிக்க முடியாமல் போனதாம். இவ்வாறு ஒரு தகவலை சபிதா ஜோசஃப் தனது வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் தமிழக சின்னத்திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி திகழ்ந்து வருகிறது. இதனை Stress…
விஜய்யின் கடைசி திரைப்படம் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் 2026 ஆம் ஆண்டு…
குப்பைக்கு உள்ள மரியாதை கூட எங்களுக்கு இல்லை. தூய்மை பணியாளரின் துயரம் வருட கணக்கில் நடக்கும் போராட்டம் விடியல் தருமா…
நடிகர் அஜித் பத்மபூஷன் விருதுடன் நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி வெளியான “குட் பேட் அக்லி”…
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய தமிழக அரசு, அந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், கோவையில்…
This website uses cookies.