பிரபல பாடகி ஜென்சி வாழ்க்கையை நாசமாக்கியதே அந்த இசையமைப்பாளர்தான் : பகீர் கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்!!

சினிமாவில் பல பிரபலங்கள் வருவதும், உடனே கலை உலகத்தில் இருந்து விலகுவதும் வாடிக்கையான ஒன்றுதான். ஆனால் பாடகர்கள் பொறுத்த வரை அவர்கள் குரல் மங்காத வரை சினிமாவில் ஜொலித்துக் கொண்டே இருக்கலாம்.

அப்படி ஒரு காலத்தில் ரெக்கை கட்டி பறந்தவர்தான் ஜென்சி. கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த இவர், சிறு வயது முதலே மேடை கச்சேரியில் பாடி வந்துள்ளார்.

ஒரு முறை யேசுதாஸ் உடன் பாட வாய்ப்பு கிடைத்தது, மேடையில் யேசுதாஸ்க்க இணையாக பாட, அவர் மீது கலையுலகத்தின் கண் பட்டது.

அப்போது தான் ஜென்சியை இளையராஜாவுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் யேசுதாஸ். தொடர்ந்து தமிழில் அடி பெண்ணே. என்னுயிர் நீதானே, என் வானிலே, காதல் ஓவியம் போன்ற காலம் காலமாக ரசிக்கப்படும் பாடல்களை பாடினார்.

தொடர்ந்து இளையராஜா வாய்ப்புகளை அள்ளிக் கொடுக்க கொடிக்கட்டி பறந்தார் ஜென்சி, ஆனால் திடீரென இனி பாடல்கள் பாடப்போவதில்லை என முடிவெடுத்து, கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் இசை ஆசிரியராக பணியாற்றினார்.

கேரளாவை விட்டு சென்னைக்கு ஜென்சி வந்தால் புகழ் பெறலாம் என இளையராஜா எடுத்துக்கூறியுள்ளார். ஆனால் ஜென்சியின் தந்தையோ மறுப்பு தெரிவித்தள்ளார்.

தமிழ் சினிமாவில், ஜானகி, சுசீலா போன்ற பல முன்னணி பாடகிகள் இருக்கும்போது நமக்கு இவ்வளவுதான் என எண்ணி ஜென்சி பாடுவதை நிறுத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் தான் பாடிய பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்களை கூட ஜென்சி பார்த்ததே இல்லை, இதனால்தான் அவர் பாடுவதை விட்டு ஒதுங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது

ஆனால் இது குறித்து பிரபல தயாரிப்பாளரான சித்ரா லட்சுமணன் பேசும் போது, ஜென்சியின் பயணம் தடைபட்டதற்கு இதெல்லாம் காரணமே கிடையாது. அவர் இனிமேல் பாடமாட்டேன் என முடிவை அவராகவே எடுக்க வில்லை. இதற்கான காரணம் இங்குள்ள இசையமைப்பாளர்களை கேட்டால் தெரிந்துவிடும். அதுமட்டுமல்ல, ஜென்சி கேரளா மாநிலம் கொச்சியில் தான் உள்ளார். அவரிம் கூட கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

இதை வைத்து பார்க்கும் போது ஜென்சி தமிழ் சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டதற்கு பின்னால் ஒரு பெரிய மர்மமே உள்ளது என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

12 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

13 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

13 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

14 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

15 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

15 hours ago

This website uses cookies.