இந்திய சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் நடிகையான ஸ்ரீதேவியின் மூத்த மகள் தான் ஜான்வி கபூர். இவர் பாலிவுட்டில் பிரபல இளம் நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தடக் திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமான ஜான்வி கபூர் தொடர்ந்து குஞ்சன் சக்சேனா தி கார்கில் கேர்ள், ரோகி, குட் லக் ஜெர்ரி, மிலி போன்ற பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகையாக இருந்து வருகிறார்.
தற்போது தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி டோலிவுட்டில் என் டி ஆர் உடன் தேவாரா என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்த படத்தின் பாடல்கள் கூட இணையத்தில் வெளியாகி ட்ரெண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றின் என்னுடைய அம்மாவுக்கு பிடிக்காத இந்த விஷயத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் அதற்காக ஆஸ்கார் விருதே கொடுத்தாலும் நான் அதை செய்ய மாட்டேன் என கூறியிருக்கிறார்.
அதாவது என்னுடைய அம்மாவுக்கு என்னுடைய தலைமுடி என் மீது அலாதி பிரியம். நான்கு நாட்களுக்கு ஒரு முறை தலையில் எண்ணெய் ஊற வைத்து மசாஜ் செய்துவிடுவார். ஒருமுறை நான் என்னுடைய முதல் படத்திற்காக சிறிய அளவு முடியை வெட்டி விட்டு வீட்டிற்கு சென்றேன். அவர் உடனே கடும் கோபத்துடன் என்னை திட்டினார்.
அதனால் என்னுடைய நீளமான தலைமுடியில் நான் ஒருபோதும் கை வைக்க மாட்டேன். மொட்டை அடித்துக் கொண்டு நடிக்க வேண்டும் என்றால் அந்த படத்திற்கு ஆஸ்கார் அவார்ட் கொடுத்தாலும் கூட என் அம்மாவுக்கு பிடிக்காத அந்த விஷயத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன் என ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் இந்த பேட்டில் கூறியிருக்கிறார்.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.