விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி வெளியான “கிங்டம்” திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக பாக்யஸ்ரீ போர்ஸே நடித்துள்ளார். கௌதம் தின்னனூரி என்பவர் இயக்கியுள்ள இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இத்திரைப்படத்தில் இலங்கை தமிழர்களை கொடியவர்களாக சித்தரித்துள்ளதாகவும் இத்திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திற்கு தமிழ் கடவுளான முருகனின் பெயர் வைத்துள்ளதாக சர்ச்சைகள் கிளம்பின. இது குறித்து சீமான் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் “கிங்டம்” திரைப்படத்தை தமிழ்நாட்டில் எந்த திரையரங்கத்திலும் திரையிடக்கூடாது எனவும் இத்திரைப்படத்தை தமிழ்நாட்டில் தடை செய்ய வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் இராமநாதபுரத்தில் “கிங்டம்” திரைப்படம் திரையிடப்பட்டு வரும் ஒரு திரையரங்கத்தை இன்று நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனால் போலீஸாருக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.