விவாகரத்துக்கு பின் அப்படி பழக கூப்பிட்ட சமந்தா – செருப்படி பதில் கொடுத்த நாக சைதன்யா!

Author: Shree
5 May 2023, 4:22 pm
samantha
Quick Share

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.

தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டுதிருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் சமந்தா தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் நட்பை தொடரலாம் என்று சமந்தா பேட்டி ஒன்றில் கூறியதை நாக சைதன்யாவிடம் கேட்டதற்கு,

இது தான் எனக்கு புரியவே இல்ல….. பிரியலாம் என்று முடிவெடுத்தப்பின் நட்பு எதற்கு? இதுதான் தன்னை மிகவும் எரிச்சல் அடையவைக்கிறது. அப்படிப்பட்ட நட்பே எனக்கு தேவையில்லை என செருப்படி பதில் கொடுத்துள்ளார். அவரின் இந்த கருத்துக்கு ஆண்கள் சமூகம் பெரும் ஆதரவு கொடுத்து வருகிறது.

Views: - 727

22

13