புது மருமகளின் ஆசையை நிறைவேற்றிய நாகார்ஜூனா – சமந்தாவுக்கு கூட இப்படி பண்ணல!

தெலுங்கு சினிமாவின் இளம் நடிகரான நாக சைதன்யா தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் பிரபல நடிகரான அக்கினேனி நாகார்ஜுனாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 2009 ஆம் ஆண்டு ஜோஷ் என்ற திரைப்படத்தில் நடித்து திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். தொடர்ச்சியாக பல ஹிட் படங்களில் நடித்து டோலிவுட்டில் பிரபலமான இளம் நடிகராக பார்க்கப்பட்டு வருகிறார்.

இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் நான்கு ஆண்டுகளிலேயே அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார். அதையடுத்து பொன்னியின் செல்வன் திரைப்பட புகழ் நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார்.இவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களாக ரகசியமாக காதலித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களின் இந்த காதல் திருமண விவகாரம் மிகப்பெரிய சர்ச்சைக்கு உள்ளானதை அடுத்து திருமண ஏற்பாடுகள் தற்போது தடுபுடலாக நடைபெற்று வருகிறதாம். இவர்களுக்கு திருமணம் முன்னதாக ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடக்க ஏற்பாடுகள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால் நடிகை சோபிதா துலிபாலாவுக்கு தன்னுடைய திருமணம் ராஜஸ்தானில் மிகவும் பிரம்மாண்டமாக நடத்த வேண்டும் என்பதில் மிகுந்த ஆசையும் ஆர்வமும் கொண்டிருந்தாராம். இதனால் மருமகளின் ஆசையை தெரிந்து கொண்ட நாகார்ஜுனா அதை நிறைவேற்றும் விதத்தில் ஹைதராபாத்தில் ராமோஜி ஃபிலிம் சிட்டி நடைபெறவிருந்த திருமணத்தை கேன்சல் செய்துவிட்டு தற்போது ராஜஸ்தானில் நடத்த திட்டமிட்டு இருக்கிறாராம்.

அதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் புது மருமகளுக்காக இப்படி பார்த்து பார்த்து செய்கிறாரே…. சமந்தாவுக்கு கூட இப்படி பண்ணியிருக்க மாட்டார் போலயே எனக் கூறி விமர்சித்து வருகிறார்கள்.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.