விஜய்க்கு ஒர்க் அவுட் ஆனது நயனுக்கு எடுபடல.. லேடி சூப்பர் ஸ்டாரை கண்டுகொள்ளாத திரையுலகம்..!

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா.

சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். கடைசியாக அவரது நடிப்பில் வெளிவந்துள்ள அன்னபூரணி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது .

இந்நிலையில், அன்னபூரணி படத்தில் இந்துமத நம்பிக்கைகளை தவறாக காட்டியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடிகை நயன்தாரா, நடிகர் ஜெய் மற்றும் தயாரிப்பாளர்கள் மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும், சர்ச்சைக்குரிய காட்சியை நீக்கும் வரை அன்னபூரணி திரைப்படம் நெட்பிளிக்ஸில் இடம்பெறாது என நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் நயன்தாரா மிகுந்த மனஉளைச்சலில் இருக்கிறாராம். இதனிடையே, ஜெய் ஸ்ரீ ராம் என குறிப்பிட்டு நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டு மன்னிப்பும் கேட்டு இருந்தார்.

இதன் மூலம் ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் முடிவு வந்தது. இதில், நயன்தாராவிற்கு இயக்குனர் வெற்றிமாறன் மட்டுமே ஆதரவாக துணை நின்றார். சென்சார் செய்யப்பட்ட திரைப்படத்திற்கு ஓடிடி நிறுவனம் இப்படி செய்திருக்கக் கூடாது. அது தவறு எனவும் கூறியிருந்தார். அதேபோல், நயன்தாராவின் ரசிகர்களும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

மற்றபடி திரையுலகை சேர்ந்த யாரும் நயன்தாராவிற்கு இந்த சம்பவத்திற்கும் துணை நிற்கவில்லை என்பது சோகமான விஷயம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் மெர்சல் இப்படத்தில், ஜிஎஸ்டி குறித்தும் கோவில்களுக்கு பதிலாக மருத்துவமனை கட்டலாம் என விஜய் வசனம் பேசி இருந்தார். இதற்கு வடக்கில் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

அந்த நேரத்தில், ரஜினிகாந்த் போன்ற முன்னணி நட்சத்திரங்களும் திரையுலகை சேர்ந்தவர்களும் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து இருந்தனர். ஆனால், தற்போது முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவிற்கு யாருமே ஆதரவு தெரிவிக்கவில்லை. நடிகருக்கு துணை நின்றவர்கள், நடிகைக்கு துணை நிற்கவில்லை பிரிவினை பார்க்கிறார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்ப துவங்கி விட்டனர்.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.