தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாரா இளம் இயக்குனர் விக்னேஷ் சிவனை 8 ஆண்டுகள் காதலித்தது பின்னர் திருமணம் செய்துக்கொண்டனர். நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் வந்த பிறகு தான் தனிப்பட்ட வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பதற்கு அர்த்தமே புரிந்துள்ளது. இந்த தம்பதி வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றனர்.
நேற்று இவர்கள் தங்களது முதலாவது திருமண நாளை கொண்டாடினார்கள். இது குறித்து விக்னேஷ் சிவன், என் உயிரோட ஆதாரம் நீங்கள் தானே, இந்த 1 வருடம் ஏற்ற தாழ்வுகள்,எதிர்பாராத பின்னடைவுகள், சோதனை நேரங்கள் என நிறைய தருணங்கள் நினைந்திருந்தது. ஆனால் அபரிமிதமான அன்பும் பாசமும் கொண்ட ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பத்தைப் பார்க்க வீட்டிற்கு வரும்போது மிகுந்த நம்பிக்கையை கொடுக்கிறது. அத்துடன் அன்பு, பாசம் ஆகியவற்றை கொடுத்து ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனாக என்னை மாற்றி மீண்டும் கனவுகள், இலட்சியத்தை நோக்கி தேடுவதற்கு அனைத்து ஆற்றலையும் கொடுத்ததற்கு மனைவி நயன்தாராவுக்கு நன்றி கூறியிருந்தார்.
அதன் பின்னர் தனது இரட்டை மகன்களை படம்பிடித்து ” Wedding Anniversary அப்பா அம்மா” என decorate செய்து மகன்கள் வாழ்த்தியது போல் கேப்ஷன் கொடுத்திருந்தார். அதன் பின்னர் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் பேவரைட் பாடலை தனது சிறுவயது நண்பர் புல்லாங்குழல் வாசிக்க அதை மெய்மறந்து கேட்ட நயன்தாரா கண்லங்கி விக்கியை கட்டிப்பிடித்து முத்தமிட்டு நன்றி கூறினார். நெருங்கிய நண்பர்களை வீட்டிற்கு அழைத்து நயன்தாராவுக்கு பிடித்த விஷயங்களை பார்த்து பார்த்து செய்து செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் விக்கி. இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.