தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஒரு நடிகையாக இப்படி இருப்பது இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்த நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார்,
அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்த பின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.
அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை 8 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. இதனிடையே நயன்தாரா – விக்னேஷ் சிவன் இருவருமே வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களையும், தொழில் ரீதியான சறுக்கல்களையும் சந்தித்து வருகிறார்கள். இதனால் கோவில் , பரிகாரம் என செய்து வருகிறார்கள். மீண்டும் விட்ட இடத்தை பிடிக்க இருவரும் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் சமீபத்திய விருது விழா ஒன்றில் இயக்குனர் மணிரத்தினம் கையால் விருது வாங்கிய நயன்தாரா, சினிமாவில் இருப்பவர்களுக்கு இரண்டே இரண்டு கனவுதான் இருக்கும். ஒன்று மணிரத்னம் போல் ஆகவேண்டும் மற்றொன்று மணிரத்னம் இயக்கத்தில் நடித்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள். எனக்கும் மணி சார் இயக்கத்தில் நடிக்க ஆசையாக இருக்கிறது.
அதற்கான வாய்ப்புகள் இரண்டு முறை வந்தது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போனது. நான் இப்போது மணிரத்னம் கைகளால் விருதினை பெற்றுக்கொள்வதை எண்ணி பெருமை படுகிறேன் விரைவில் அவர் இயக்கத்தில் நடித்து அவர் கையால் விருது வாங்குவேன் என நம்புகிறேன் என கூறினார். இந்த சம்பவம் நடந்த சில நாளிலே மணிரத்தினம் அடுத்ததாக கமல் வைத்து இயக்கப்போகும் புதிய படத்தில் நயன்தாராவை கமிட் செய்துள்ளாராம். இதன் மூலம் நயன்தாரா கமலுடன் முதன் முறையாக நடிக்கும் ஆசையும் நிறைவேறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், நாடு…
கலவையான விமர்சனம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் மே தினத்தை முன்னிட்டு வெளியான நிலையில் இத்திரைப்படத்திற்கு…
16 வயது சிறுவனுடன் 12 முறை உடலுறவு வைத்த டீச்சர் மீது 64 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இந்த அதிர்ச்சி சம்பவம்…
This website uses cookies.