தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடித்தார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி ரிலீஸ் ஆன இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரித்திருந்தார்.
இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்த நயன்தாரா ஜவான் படத்தை மிகப்பெரிய கனவு படமாக நினைத்துக்கொண்டு அதனை பெரிதும் நம்பிக்கொண்டிருந்தார். இப்படத்தில் நயன்தாராவுடன் பிரபல பாலிவுட் ஸ்டார் நடிகை தீபிகா படுகோன் நடித்திருந்தார். இரண்டு நட்சத்திர நடிகைகள் ஒரே படத்தில் நடித்தாலே தேவையில்லாத பிரச்சனைகளெல்லாம் வரும்.
அப்படித்தான் தற்போது ஜவான் படத்தில் ஏன் தான் நடித்தேனோ? என புலம்பிக்கொண்டிருக்கிறாராம் நயன்தாரா. ஆம், இப்படத்தில் தனக்கு மிகப்பெரிய ரோல் என கூறி அட்லீ நம்ப வைத்து தன்னை ஏமாற்றிவிட்டதாக புலம்பி வருகிறாராம். இப்படம் முழுக்க தீபிகா படுகோன் காட்சிகளை வைத்துவிட்டு நயன்தாரா ஏதோ கெஸ்ட் ரோலில் நடித்தது போன்று காட்டிவிட்டார் அட்லீ. நயன்தாரா நடித்த காட்சிகள் அனைத்தையும் வெட்டி தூக்கி எறிந்துவிட்டாராம்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட ஷாருக்கான், தீபிகா படுகோனிடம், ” உங்களுக்கு சின்ன ரோல் என்று கூறி நாங்கள் பிராங் பண்ணிட்டோம் மன்னிச்சிக்கோங்க என கூறினாராம். ஆனால் அவர்கள் பிராங் பண்ணது என்னமோ நயன்தாராவை தான். இதனால் நயன்தாரா மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம். பாலிவுட்டில் அறிமுகமாகி அங்கும் லேடி சூப்பர் ஸ்டார் ஆகிவிடலாம் என கனவு கண்டு ஓவ ர் ஆட்டம் போட்ட நயன்தாராவின் வாலை ஒட்ட நறுக்கிவிட்டார் தீபிகா படுகோன்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.