தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.
முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.
தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.
ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் , தமிழில் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார்.
இந்நிலையில் நயன்தாரா பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை சப்ப காரணம் காட்டி தவறவிட்டுள்ளார். அதாவது, கார்த்திக் தமன்னா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் “பையா” இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா தானாம். தயாரிப்பாளர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் அவரும் தாறுமாறான சம்பளம் கேட்டதால் முடியாது என கூறிவிட்டு தம்மன்னாவை கமிட் செய்தார்களாம்.
அதே போல் உதயநிதி ஸ்டாலின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் அடித்து அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடிக்க நடிகை நயன்தாராவுக்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், அந்த தா சமயம் நயன்தாரா காதல் சர்ச்சைகளில் சிக்கியதால் எந்த படத்திலும் நடிக்காமல் ஆர்வம் காட்டாமல் நிராகரித்துவிட்டாராம்.
அதே போல் தீபிகா படுகோன் – ஷாருக்கான் நடித்து மாபெரும் ஹிட் அடித்து பல கோடிகள் லாபம் கொடுத்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா தானாம். ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வேண்டாம் என கூறிவிட்டு பின்னர் வருந்தினராம். அந்த படத்தில் மட்டும் நடித்திருந்தால் நயன்தாரா பாலிவுட்டின் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார் என்கிறது திரை வட்டாரம்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
This website uses cookies.