சப்ப காரணத்தால் சூப்பர் ஹிட் படங்களை தவறவிட்ட நயன்தாரா – இதுல ஒன்னு நடிச்சிருந்தால் கூட வேற மாறி இருந்திருக்கும்!

தமிழ் சினிமாவின் டாப் நடிகையான நயன்தாரா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்து அங்குள்ள லோக்கல் சேனல் ஒன்றில் ஆங்கராக பணிபுரிந்து அதன் பின்னர் கிடைத்த படவாய்ப்புகளை மிஸ் பண்ணாமல் நடித்து மிகப்பெரிய மார்க்கெட் பிடித்து இன்று டாப் நடிகை என்ற அந்தஸ்தில் இருக்கிறார்.

முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு மனசினகாரே என்ற மலையாள மொழித் திரைப்படம் மூலம் திரைப்படத்துறைக்கு அறிமுகமான நயன்தாரா, 2005 ஆம் ஆண்டு ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகம் ஆனார். தமிழில் அறிமுகமான முதல் படத்திலே பரவலான ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டார்.

தொடர்ந்து தமிழில் நடித்து சிறந்த கதைகளை தேர்வு செய்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் நடித்து முன்னணி நடிகையாக மார்க்கெட் பிடித்தார். இதனிடையே விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். அவர்களுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர். நயன்தாராவுக்கு திருமணத்திற்கு பின்னர் தொழில் சார்ந்து பல சறுக்கல்களை சந்தித்து வருகிறார்.

ஆனாலும் முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக இந்தியில் ஜவான் படத்தில் ஷாருக்கனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் , தமிழில் அன்னபூரணி திரைப்படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளாகினார்.

இந்நிலையில் நயன்தாரா பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை சப்ப காரணம் காட்டி தவறவிட்டுள்ளார். அதாவது, கார்த்திக் தமன்னா நடிப்பில் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் “பையா” இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா தானாம். தயாரிப்பாளர் அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தியும் அவரும் தாறுமாறான சம்பளம் கேட்டதால் முடியாது என கூறிவிட்டு தம்மன்னாவை கமிட் செய்தார்களாம்.

அதே போல் உதயநிதி ஸ்டாலின் திரைவாழ்க்கையில் மிகப்பெரிய ஹிட் அடித்து அவருக்கு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடிக்க நடிகை நயன்தாராவுக்கு தான் முதலில் வாய்ப்பு கிடைத்ததாம். ஆனால், அந்த தா சமயம் நயன்தாரா காதல் சர்ச்சைகளில் சிக்கியதால் எந்த படத்திலும் நடிக்காமல் ஆர்வம் காட்டாமல் நிராகரித்துவிட்டாராம்.

அதே போல் தீபிகா படுகோன் – ஷாருக்கான் நடித்து மாபெரும் ஹிட் அடித்து பல கோடிகள் லாபம் கொடுத்த சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நயன்தாரா தானாம். ஆனால், அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் வேண்டாம் என கூறிவிட்டு பின்னர் வருந்தினராம். அந்த படத்தில் மட்டும் நடித்திருந்தால் நயன்தாரா பாலிவுட்டின் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார் என்கிறது திரை வட்டாரம்.

UpdateNews360 Rajesh

Recent Posts

விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!

தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…

14 hours ago

ஒரு செங்கலைக் கூட இன்னும் எடுத்து வைக்கவில்லை.. திமுக பாணியை கையில் எடுத்த அண்ணாமலை!

மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…

14 hours ago

சந்தானம் போட்ட கண்டிஷனால் கடுப்பான சிம்பு? STR 49 படம் கைமாறியதற்கு காரணம் இதுதானா?

STR 49  “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…

15 hours ago

தனிமனிதனை வேட்டையாடுவதால் வரலாறை மாற்ற முடியாது : கீழடி அமர்நாத் மாற்றம்.. சு.வெங்கடேசன் கண்டனம்!

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…

15 hours ago

கொரேனா பரவல்.. தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கா? உண்மை இதுதான்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…

15 hours ago

தக் லைஃப் தோல்வியால் சிம்புவுக்கு வந்த பிரச்சினை? கடைசில இப்படி ஆகிடுச்சே!

சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…

16 hours ago

This website uses cookies.