நடிகை நயன்தாரா இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். தென்னிந்திய சினிமாவில் கவனம் செலுத்தி வந்த அவர் ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் நுழைந்தார்.
தற்போது கன்னடம் – ஆங்கில மொழியில் உருவாகி வரும் டாக்ஸிக் படத்தில் நடித்து வருகிறார். இதை தவிர தமிழில் அவருக்கு ஏராளமான படங்கள் கைவசம் உள்ளது.
இதையும் படியுங்க : பிரபாஸ்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை… மாஸ் கூட்டணியுடன் வெளியான அறிவிப்பு!
குறிப்பாக தற்போது இவர் நடித்து வரும் படம் மூக்குத்தி அம்மன் 2. இந்த படத்தின் பூஜை ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து ஏராளமான சர்ச்சைகளில் நயன்தாரா சிக்கி வருகிறார்.
பட பூஜையின் போது பங்கேற்ற நடிகை மீனாவை நயன்தாரா கண்டுகொள்ளாதது பெரும் சர்ச்சையாக வெடித்தது. எவ்வளவோ பேச முயன்றும் மீனாவை நிராகரித்துள்ளார் நயன்தாரா.
இதனிடையே பூஜையின் போது நடிகை ரெஜினா செல்பி புகைப்படம் எடுத்தார். அதில் மீனா, குஷ்பு, நயன்தாரா, டிடி என எல்லோரும் இருந்தனர். அந்த புகைப்படத்துக்கு போஸ் கொடுத்த நயன்தாரா, கேரவனுக்கு போய் ரெஜினாவுக்கு போன் செய்து கண்டபடி திட்டியுள்ளார்.
என் அனுமதியில்லாமல் எப்படி என்னை போட்டோ எடுக்கலாம் என கூறி விளாசியுள்ளார். அழுகாத குறையாக ரெஜினா மன்னிப்பு கேட்டுள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் படத்தின் இயக்குநர் சுந்தர் சி புலம்பி தவித்து வருகிறாராம்.
என்னதான் டாப் நடிகையாக இருந்தாலும் இயக்குநர், சீனியர் நடிகர்களுக்கு மரியாதை தர வேண்டும், ஆனால் நயன்தாரா யாருக்கும் மதிப்போ மரியாதையோ தராமல் நடந்து கொள்வது அவரின் வீழ்ச்சி பாதைக்குதான் வழிவகுக்கும் என பத்திரிகையாளர் திண்டுக்கல் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.