‘வாடகை தாய் விவகாரம்’- எந்த சட்டத்தையும் மீறல.. அரசிடம் ஆதாரம் அளித்த நயன்தாரா..!

Author: Vignesh
18 October 2022, 3:30 pm
nayanthara_updatenews360 1
Quick Share

நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் தாங்கள் பெற்றோர் ஆகிவிட்டதாக அக்டோபர் 9ம் தேதி அறிவித்தார் விக்னேஷ் சிவன். வாடகைத் தாய் மூலம் பெற்றோர் ஆன விவகாரம் குறித்து விசாரணை நடத்த தனிக் குழுவை அமைத்தது தமிழக அரசு.

வாடகைத் தாய்

வாடகைத் தாய் மூலம் பிள்ளைகள் பெற்றதால் எந்த சட்டத்தையும் மீறவில்லை என்று நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அரசிடம் தெரிவித்துள்ளனர். ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். துபாயில் இருக்கும் உறவினர் தான் வாடகைத் தாயாக இருந்தார் என்று தெரிவித்துள்ளனர்.

Vikki Nayan - Updatenews360

சட்டம்

வாடகைத் தாய் தொடர்பாக கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதிவு செய்தோம் என்று நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அரசிடம் தெரிவித்துள்ளனர். கமர்ஷியல் முறையில் வாடகைத் தாயை அமர்த்துவதை தடை செய்து வந்த சட்டம் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வந்தது. அது அமலுக்கு வருவதற்கு சில வாரங்களுக்கு முன்பு நயன்தாரா வாடகைத் தாய்க்காக பதிவு செய்திருக்கிறார்.

nayanthara_updatenews360

விளாசல்

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் வாடகைத் தாய் மூலம் பிள்ளை பெற்றுக் கொண்டது தொடர்பாக பலரும் அவர்களை சமூக வலைதளங்களில் விளாசுகிறார்கள். இந்நிலையில் நாட்டில் எத்தனையோ பிரச்சனை இருக்க நயன்தாரா விவகாரம் ரொம்ப முக்கியமா என்று அவரின் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Views: - 284

0

0