நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதியினரின் இரட்டை குழந்தை விவகாரத்தில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறியிருப்பது அம்பலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் தாங்கள் பெற்றோர் ஆகிவிட்டதாக அக்டோபர் 9ம் தேதி அறிவித்தார் விக்னேஷ் சிவன். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வாடகைத் தாய் மூலம் பெற்றோர் ஆன விவகாரம் குறித்து விசாரணை நடத்த தனிக் குழுவை அமைத்தது தமிழக அரசு.
அதேவேளையில், வாடகைத் தாய் விவகாரம் சர்ச்சை எழுந்த நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் விளக்கம் கொடுத்தனர். அதாவது, வாடகைத் தாய் மூலம் பிள்ளைகள் பெற்றதால் எந்த சட்டத்தையும் மீறவில்லை என்றும், ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகவும், துபாயில் இருக்கும் உறவினர் தான் வாடகைத் தாயாக இருந்தார் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வாடகை தாய் விவகாரம் தொடர்பாக மருத்துவ நிர்வாகத்திடம் இன்று மருத்துவத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மருத்துவமனை நிர்வாகம் விதிகளை மீறி இருப்பது அம்பலமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் விளக்கம் பெற்றவுடன் அறிக்கை வெளியிடப்படும் என்றும், விதிகளை மீறி இருப்பது உறுதி செய்யப்படும் பட்சத்தில் மருத்துவமனை மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், மருத்துவமனையின் விளக்கத்தை பொருத்து நயன்தாரா – விக்னேஷ் சிவனிடம் விளக்கம் பெறப்பட்டு அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.