நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது மூக்குத்தி அம்மன் 2ஆம் பாகத்தில் நடித்து வருகிறார். சுந்தர் சி இயக்கும் இந்த படத்தை ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
இதையும் படியுங்க : 60 வயதில் 3வது திருமணம்… கல்யாண வயதில் உள்ள மகனை மறந்த பிரபல நடிகர்!
அண்மையில் ₹1 கோடி செலவில் பிரம்மாண்ட செட் போடப்பட்டு படத்துவக்க விழா நடந்தது. அதில் சுந்தர் சி, குஷ்பு, நயன்தாரா, மீனா, ரெஜினா, டிடி, மத்திய அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முதல்முறையாக நேரலை காட்சியும் நடத்தப்பட்டது. இந்த விழாவில் குஷ்புவை பார்த்ததும் கட்டிப்பிடித்து, புன்னகை செய்த நயன்தாரா, சீனியர் நடிகையான மீனாவை கண்டுகொள்ளவே இல்லை.
அருகருகே நின்றாலும், நயன்தாரா மீனாவை பார்த்து ஒரு சின்ன புன்னகை கூட செய்யவில்லை. இதனால் நயன்தாராவுக்கு திமிரு அதிகம், ஓவர் பில்டப் என்ற மீனாவுக்கு ஆதரவாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் நயன்தாரா ஆதரவாளர்கள், இல்லை இருவரும் பேசினர் என கூறினர். இந்தநிலையில் மீனா சமூகவலைதளங்களில் பதிவிட்டது பேசுபொருளாகியுள்ளது.
தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு போட்டுள்ள மீனா, நிறைய ஆடுகளுடன் இருக்கு சிங்கத்தின் புகைப்படத்தை பகிர்ந்து, எப்போதும் தனியாக இருக்கும் சிங்கம் ஆடு தன்னை பற்றி என்ன நினைக்கிறது என்ன சொல்கிறது என்று கவலைப்படாது என பதிவிட்டுள்ளார்.
மேலம் உங்கள் நல்ல உள்ளத்தை மட்டும் நினைத்து பெருமைபடுங்கள். எல்லோரிடமும் அது இருக்காது என பதிவும் போட்டுள்ளதால், இது நயன்தாராவை குறிப்பிட்டுத்தான் பதிவிட்டிருக்கிறார். மீனா சரியான பதிலடி கொடுத்துள்ளார் என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.